நாம் தவறுதலாக எதையாவது, 'டுவீட்' செய்துவிட்டால், அதை அழிக்கவோ; தடுக்கவோ முடியாமல் போய்விடும். இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், டுவிட்டர் நிறுவனம், 'அன்டு டுவீட்' எனும் வசதியை வழங்கும் முயற்சியில் இருக்கிறது.
குறிப்பாக, இந்த வசதியை அதனுடைய பணம் செலுத்தி சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்காக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த, அன்டு டுவீட் வசதியை, டுவீட் செய்த குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பயன்படுத்தி கொள்ளலாம். கருத்துக்களைவிட, 'டைப்' செய்யும் போது ஏற்படும் எழுத்துப் பிழை உள்ளிட்ட காரணங்களால், தாங்கள் செய்த டுவீட்டை அழிக்க விரும்பும் நபர்களே அதிகமாக இருப்பதாக, டுவிட்டர் தெரிவித்து உள்ளது.













