பிரான்சில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் அனஸ்டாசியா பவ்லிசென்கோவா, செக்குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவை சந்தித்தார். முதல் செட்டை பார்பரா 6-1 என எளிதாக கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பவ்லிசென்கோவா ஆதிக்கம் செலுத்தினார். 5-2 என முன்னிலையில் இருந்த போது, இடது தொடையில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு போட்டியை தொடர்ந்தார். பின் இந்த செட்டை 6-2 என வசப்படுத்தினார். கடைசி செட்டில் பார்பரா 6-4 என வென்றார்.
ஒரு மணி நேரம், 58 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பார்பரா 6-1, 2-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன் முறையாக கோப்பை வென்றார். கோப்பை கைப்பற்றிய பார்பரா ரூ. 14.41 கோடி, பவ்லிசென்கோவா ரூ. 6.65 கோடி பரிசு பெற்றனர்.













