தினமும் கோமியம் குடிக்கிறேன் - கொரோனா வராது - பாஜக எம்பி

SOCIAL SHARE
Pin It

நான் தினமும் கோமியம்  குடிக்கிறேன். அதனால்தான் எனக்கு கொரோனா தொற்று வரவில்லை என பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் கூறியுள்ள கருத்தை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பிரக்யா சிங் தாக்குர், நானும் பசுவின் சிறுநீரை தினமும் குடிக்கிறேன். அதனால்தான் நான் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்வதில்லை என்றும்  தற்போது வரை எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து மக்களும் நாட்டு மாடுகளை வைத்திருக்க வேண்டும். அனைவரும் அரசமரம், ஆலமரம், துளசி உள்ளிட்டவைகளை நட்டு வளர்க்க வேண்டும் என கூறினார்.

நீங்கள் வளர்க்கும் போது உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவை இருக்காது. இந்த முறை போபாலில் ஒரு கோடி மரங்கள் நடப்படும். அதற்கு தேவையான தண்ணீர் வசதி தண்ணீர் டேங்குகள் மூலமாக வழங்கப்படும் என்றார். பிரக்யா சிங்கின் இந்த கருத்தை இணையவாசிகள் பலரும் கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ARUNACHALAM