தமிழையும் தமிழ் மண்ணையும் காத்த ஐயா கோ. நம்மாழ்வார்

SOCIAL SHARE
Pin It

இயற்கை வேளாண்மை பற்றிய கொள்கைகள் :

கோ.நம்மாழ்வார் அவர்களை அதிகம் ஈர்த்தவை ஜே.சி. குமரப்பாவின் கொள்கைகள் தான் J.C .KUmarappa  அவர்கள் இந்தியாவில் இயந்திரத்தின் பயன்பாடுகளை அறிமிகம் செய்த பொழுது ‘‘ இயந்திர டிராக்டர் மிக  நல்லாத்தான் உழும்; ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய சாணி போடாதே’’ என்று சொன்னதை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன் தனது

ஒவ்வொரு கூட்டத்திலும் குறிப்பிடுவார் நம்மாழ்வார்.

 

மேலும் விவசாயிகளிடம் சென்று பப்பாளி, கொய்யா, வாழை, நாவல் போன்றவை பயிரிடுங்கள்.ஏன்னா ,, ‘‘ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச் சாப்பிடப்போறீங்க?’’ என்று நமது நாட்டின்  பாரம்பரியப் பழங்களையே வலியுறுத்துவார். மிக முக்கியமாய் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற அந்நியப் பழங்களைச் சாப்பிடுவதையும் இயன்றவரை தவிர்த்தே வந்தார்.

நைட்ரஜன் சத்து குறைபாடு :

இரசாயன உரங்களை  கொண்டு நிலத்தில் ஏற்படும்  நைட்ரஜன் சத்துக் குறைவுக்காக  யூரியா போன்ற இரசாயன வேளாண்மை உரங்கள் மண்ணுக்குத் தேவை என்று படித்த பலரும் வாதிட்டபோது, பழ தலைமுறைகளாக நாம் செய்து வரும் பாரம்பரிய உழவு/ வேளாண்மை முறையான பயிர் சுழற்சி மற்றும்  உழவு மூலம் இயல்பாகவே காற்றில் இருந்து கிடைக்கும் நைட்ரஜன் சத்து நமது மண்ணில் வளம் மற்றும்  நைட்ரஜன் சத்து அளவை இயற்கையான முறையில் எந்த ரசாயனமும் இல்லாமல் அதிகரிக்கிறது என்று முதன்முதலாக பலருக்கு எடுத்துகாட்டி அனைவருக்கும் நிரூபித்துக்காட்டியவர் நம்மாழ்வார்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியின் காரணமாக மத்திய மாநில  அரசு உரங்களை பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவித்துக்கொண்டிருந்த நேரத்தில் , நம்மாழ்வார் தமிழகத்தின் பல  கிராமந்தோறும் சென்று விவசாயிகளைச் சந்தித்து , இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை எவ்வாறு கூடும், அப்படி கூடும் பொழுது  அது அளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறது என்பதை விவசாயிகள் புரியும் படி சிறிய செயல்விளக்கம் மூலம் நிரூபித்துக்காட்டுவார் .

 

இன்றைக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாயம்பற்றிய  ( பஞ்சகாவியம் , பீஜமிர்தம் , அமிர்தகரைசல் )விழிப்புணர்வு தமிழகத்தில்  அதிக அளவு புரிதல் இருபதற்கு அதற்கு நம்மாழ்வாரின் மிக முக்கிய பழ செயல்பாடுகளே காரணம்.

மண்டல வேளாண்மை ஆராய்ச்சி பணி :

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் , ஊரெங்கும்  பசுமைப் புரட்சி பற்றிய கருத்துக்கள் அதி தீவிரமாகப் பரவிய காலகட்டத்தில், நம்மாழ்வார் அவர்கள்  இயற்கை விவசாயதிற்கான தனது வாழ்நாள் பயணத்தைத் தொடங்கினார். அதே நேரம் இந்த வாழ்வியல் பயணதிருக்கு தான் பார்த்துவந்த அரசு பணியான “ மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்” இருந்த தனது மத்திய அரசு  பணியையும் உதறினார்.

ARUNACHALAM