முருங்கை கீரை பொடி

SOCIAL SHARE
Pin It
முற்றாத முருங்கை கீரைகள் இரண்டு கட்டு கழுவி வெயிலில் உலர்த்தி, மிக்சியில் பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
 
ஒரு வானலியில்...
 
1. காய்ந்த மிளகாய் 25 கிராம்,
 
2. உளுந்தம் பருப்பு 150 கிராம்,
 
3. மிளகு 25கி.,
 
4. சீரகம் 10 கி,
 
போட்டு சிவக்க வறுத்து பின் அதையும் நைசாக அரைத்து முருங்கை இலை பொடியுடன் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ளவும்.
 
இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடிக்கு பதிலாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கு க்ரீன் ரைஸ் என்று கலர்புல்லாக கொடுக்கலாம்.
 
தோசை மேல் தூவி, சப்பாத்தி மாவில் சேர்த்து, இட்லி மாவு ஊற்றி அதில் டாப்பிங்காக, மோரில் கலந்து, என்று உங்கள் கற்பனைக்கு ஏற்றார் போல் எப்படி வேண்டும் என்றாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
முருங்கைகீரை பொடி முற்றிய சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸும, இரும்பு சத்தும், இரத்த சுத்திக்கும், நரம்பு வீரியத்திற்கும் மிகவும் துனை புரியும்.
 
பெரும்பாலன நோய்களுக்கு காரணமான மலச்சிக்கலை விரைவில் சரி செய்யும். இளமையுடன் வைக்கும். ரத்த சோகை நீக்கி, ஹீமோகுளோபினைக் கூட்டும் அதிசய கீரை பொடி இந்த முருங்கை கீரை பொடி.
 
உடல் அசதி, அதிக எடை, மூட்டு வலி, சளி, இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, சிறு நீரக நோய், போன்ற விஞ்ஞான மருத்துவத்திற்கும் சவால் விடும் வியாதிகளை விரைந்து சீர்படுத்தும் அதிசய சிரஞ்சீவி இந்த முருங்கை கீரை.
 

ARUNACHALAM