வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச டோக்கன் விநியோகம் இன்றிரவு முதல் நிறுத்தப்படுகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச டோக்கன் தரப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பரமபத வாசலை திறந்து வைக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோயிலுக்கு அளவுகடந்த கூட்டம் வரும் என கருதி இலவச டோக்கன் விநியோகம் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.













