சிலிண்டர் டெலிவரி : அதிக கட்டணம் கேட்டால் புகார் செய்யலாம்

SOCIAL SHARE
Pin It

வீட்டு உபயோக, வர்த்தக காஸ் விலை அதிகரித்துள்ள நிலையில் பில்லுக்கு மேல் எந்தவித கூடுதல் கட்டணமும் கொடுக்க வேண்டாம் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

காஸ் ஏஜென்சீஸ்களில் இருந்து சிலிண்டர் கொண்டு வரும் டெலிவரி மேன்கள் சிலர் பில் கட்டணத்திற்கு மேல் தங்களுக்கு என்று தனி கட்டணமாக ரூ.60 வரை வசூலிப்பதால் ஒரு காஸ் விலை ரூ.870 என்றே நுகர்வோர் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த டெலிவரி மேன்களுக்கு ஏஜென்சீஸ்கள் டெலிவரி செய்ய சம்பளம் வழங்கும் நிலையிலும் இவர்கள் தினமும் டெலிவரி செய்யும் ஒவ்வொரு வீட்டிலும் தனி கட்டணம் வசூலிப்பது நியாயம் இல்லை.

இது குறித்து ஏஜென்சீஸ், எண்ணெய் நிறுவனங்களிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீட்டு, வர்த்தக காஸ் சிலிண்டர் டெலிவரி செலவுக்கும் சேர்த்து பணம் வசூலிப்பதால் பில்லுக்கு மேல் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டாம். கீழ், மாடி வீடுகளில் டெலிவரி செய்தாலும் டெலிவரி மேன்கள் தனி கட்டணம் வசூலிக்க கூடாது. சிலிண்டர் டெலிவரிக்கு முன் தராசில் எடை போட வேண்டும். வீட்டில் ஆள் இல்லையென்றால் போனில் தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது கதவில் டோர் சிலிப் ஒட்ட வேண்டும். பதிவு செய்த 2 நாட்களில் காஸ் டெலிவரி செய்ய வேண்டும். அடுத்தது காஸ் புக் செய்ய 21 நாட்கள் காத்திருக்காமல் உடனே புக் செய்யலாம்.

புதிய காஸ் இணைப்பின் போது ஏஜென்சீஸ்க்கள் காஸ் அடுப்பு, குக்கர் ஸ்டேன்ட், லைட்டர் உள்ளிட்ட பொருட்களை வாங்க நுகர்வோரை கட்டாயப்படுத்தக்கூடாது. டெலிவரி செய்யும் போது பில் தொகைக்கு மேல் கூடுதல் பணம் கேட்டால், எடை போட்டு காட்டவில்லை என்றால் இன்டேன் 044 - 2433 9236. இந்துஸ்தான் பெட்ரோலியம் 1800 233 3555 / 044 - 2498 5153, பாரத் பெட்ரோலியம் 1800 22 4344, மாநில நுகர்வோர் சேவை மையம் 044 - 2859 2828 எண்கள், இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். இமெயிலில் புகார் தெரிவிக்கலாம். கூடுதல் தகவல்களை www.consumer.tn.gov.in இணையத்தளத்தில் பெறலாம்.

ARUNACHALAM