ஒவ்வொரு மாதமும் மத்திய, மாநில அரசுகள் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். இவை பெரும்பாலும் சாதாரண மக்களின் தினசரி வாழ்வு சார்ந்தவை. மார்ச் மாதம் என்னென்ன மாற்றங்கள் என தற்போது காணலாம்.
அரசு மானியம் மற்றும் அரசு நேரடியாக பணமாக அனுப்பக்கூடிய சலுகைகளை பெற SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.
இந்தியன் வங்கியின் ATM-களில் இனி வாடிக்கையாளர்களால் 2000 ரூபாய் நோட்டு எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியன் வங்கி (Indian Bank) ATM-களில் 2000 ரூபாய் நோட்டு வராது.
இன்று முதல் சுங்கச் சாவடிகளில் இலவச ஃபாஸ்டேக் (free FASTag) வழங்கப்படாது என இந்திய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. புதிதாக ஃபாஸ்டேக் வாங்க விரும்புவோர் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.













