அலாஸ்காவில் கொட்டித் தீர்த்த பனி!

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஒரே இரவு 18 அங்குலம் அளவுக்கு பனி கொட்டி தீர்த்தத்தால் சாலைகள், வாகனங்கள் அனைத்தும் உறைபனி வியாபித்துள்ளது. அலாஸ்காவில் 2ம் கட்ட பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் உறைபனி கொட்டி வருகிறது. ஆங்கரேஜ் என்ற நகரத்தில் ஒரே இரவில் 18 அங்குலம் அதாவது சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு உறைபனி கொட்டியிருக்கிறது. இதனால் சாலைகள், வீடுகள், வாகனங்கள் அனைத்தும் பணிக்குவியலால் மூடப்பட்டுள்ளன.

மலை நகரமான ஆங்கரேஜில் மட்டும் 18 அங்குலம் பனிப்பொழிவு பதிவாகி இருக்கிறது. சில இடங்களில் மட்டும் 16 அங்குலம் அளவுக்கு பனி பெய்துள்ளது என்று தெரிவித்தார். சாலைகளை பனி மூடியிருப்பதால் அலாஸ்காவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு பனிபொழிவின் விழுக்காடு மேலும் அதிகரிக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ARUNACHALAM