நாட்டின் மிகப்பெரிய அரசாங்க ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது. LIC மெச்யூரிட்டி பாலிசியின் தொகையை (LIC Policy Maturity Claim) நாடு முழுவதும் உள்ள எந்த LIC கிளையிலும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். எனினும், மெச்யூரிட்டி தொகை கோரலின் பிராசசிங் செயல்முறை அவரவரது பிரதான கிளை மூலமே செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் முறையில், வாடிக்கையாளர்கள் எந்த கிளையில் டெபாசிட் செய்தாலும், அந்த கிளை, அந்த ஆவணங்களை பிரதான கிளைக்கு அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.













