ஆலங்குளம் தொகுதியில், 'பனங்காட்டு படை' ஒருங்கிணைப்பாளர், ஹரி நாடார் களம் இறங்கி உள்ளார். சென்னையில் வசிக்கும் இவர், பிரசாரத்திற்காக, ஆலங்குளத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார். தினமும் காலை, மாலையில் கிராமம் கிராமமாக சென்று ஓட்டுக்கேட்கிறார். செல்லும் இடமெல்லாம், பெரும் கூட்டம் திரள்வதால், 'குஷி'யில் மிதக்கிறார். இவருக்கு எப்படி இவ்வளவு கூட்டம் என புரியாமல், இரு கட்சிகள் பீதியில் உள்ளனர்.
வாலிபர்கள் கூட்டம், ஜாதி பாசத்தில் வந்தது என வைத்துக் கொண்டாலும், பெண்கள் ஏனய்யா இப்படி ஓடி, ஓடி வருகிறார்கள் அவர் பேச்சை கேட்க? என்று இரு முகாமிலும் பட்டிமன்றம்.ஹரி நாடார் பேசுவதை கேட்க அவ்வளவு ஆர்வமா, உங்களுக்கு என, சில பெண்களை விசாரித்த போது,
'அவரு என்ன பேசுறார்னு கேக்க வரலைங்க.. கிலோ கணக்குல தங்க நகையெல்லாம் போட்டுகிட்டு வாரார்னு சொன்னாகளா... அதான் எப்டி இருக்கும்னு பாத்துட்டு போவலாம்னு வந்தோம்...' என்றனர்.
ஹரி நாடார் கழுத்திலும், காதிலும், கையிலும் சுமக்கும், நகைகள் நாலே கால் கிலோ. 4,250 கிராம். 531 சவரன். அவரிடம் உள்ள மொத்த நகைகள், 1,400 சவரன் மதிப்பு, 5 கோடி ரூபாய்.













