தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.
கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை. ஆனாலும் தமிழகத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்வதால் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஊரடங்கு வரும் என்பவை வெறும் வதந்திகள் தான். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.













