மீண்டும் வருகிறது PUBG

SOCIAL SHARE
Pin It

கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி இந்திய அரசு சீன நிறுவனங்களுக்கு சொந்தமான 118 செயலிகளை தடை செய்தது இதில் ஒரு குறிப்பிட்ட தகுந்த ஒரு ஆப் பப்ஜி.கடந்த முறை டிக் டாக் உடன் 50 க்கும் மேற்பட்ட ஆப்களை இந்திய அரசு தடை செய்த பொழுது பப்ஜியும் தடை செய்யப்படும் என்று சிலர் யூகித்து வந்த நிலையில் இந்த உத்தரவானது வந்துள்ளது. இந்த உத்தரவிற்கு பிறகு பப்ஜி செயலி இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் உடைய ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த உத்தரவிற்கு அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டு இருந்த பலர் தங்களது எதிர் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்தனர். சரி பப்ஜி என்றால் என்ன வென்று பார்த்தால் அது ஒரு FIRST PERSON SHOOTING GAME வகையை சார்ந்ததுதான். ஆனால் அதில் பேட்டில் ராயல் என்னும் விளையாடும் முறையில் உங்களுடன் விளையாடும் நபர்களுடன் பேசிகொண்டே விளையாட முடியும், மற்றும் ஜெயித்தால் சிக்கன் டின்னர் என்று அதை கூறுவர், இது போன்ற சிறுசிறு விஷயங்களும், நல்ல அணிமேஷநும் பப்ஜி விளையாடுவோர் எண்ணிக்கையை 5 கோடி ஆக்கியது. ஆனால் இந்த கேம் முதலில் கணினியில் விளையடும் வகையில் தான் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பிறகு கிடைத்த வெற்றி மற்றும் வரவேற்பிற்கு பிறகு 2018 மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது இருப்பினும் கேமின் செயலி மீது பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அதாவது இந்த செயலி வன்முறையை தூண்டுவது போல் இருக்கிறது என்றும் இதை விளையாடி பல மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் மேலும் சிலர் அதில் வரும் கேரக்டருக்காக அந்த கேமின் IN APP PURCHASE என்று கூறப்படும் முறை மூலம் விதவிதமான ஆடைகளை, துப்பாக்கிகள், தொப்பிகள், போன்ற சிறு சிறு விஷயங்களுக்காக பெருமளவில் பணம் செலவு செய்து விணாக்குகின்றனர் என்னும் குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. ஆனால் பப்ஜி விளையாடுபவர்கள் இவர்கள் கூறும் அனைத்தும் இதைப் போன்று இருக்கும் பல விளையாட்டுகளுக்கு பொருந்தும் என்றும், பப்ஜி அனைவராலும் விளையாட படுவதால் அனைவரின் கண்களும் அதன்மீது மட்டுமே படுகின்றன என்றும் கூறுகின்றன. ஆனால் இப்போது வந்த தடையோ இந்தக் காரணங்களுக்காக வந்த தடையல்ல.

பப்ஜி சீன நிறுவனத்துடைய கேம் என்றும் எனவே டிக் டாக் போல சீன அரசின் விதியான சீனாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் அவர்களின் நிறுவனத்தின் தகவல்களை அரசு மேற்பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனப்படும் விதிக்கு உட்பட்டவை தான். எனவே இந்திய பயனாளர்களின் தகவல்கள் மற்றும் மொபைல் போனில் இருக்கும் தகவல்களையும் திருடி சீன அரசுக்கு கொடுக்கும் ஆபத்து உள்ளது என்றும் மற்றும் உளவு பார்க்கவும் பல்வேறு விதங்களில் சீனாவிற்கு இது பயன்படும் எனவே, இந்திய இறையாண்மைக்கு ஆபத்து உள்ளதாக கூறி தடை செய்தது.

மற்றும் பலர் இந்தியா மற்றும் சீனாவிற்கும் இடையில் எல்லையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இந்தியா கொடுக்க நினைக்கும் பொருளாதார நெருக்கடி என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் டிக் டாக்கை போல பப்ஜியும் முழுக்க முழுக்க சீன தயாரிப்பபோ சீனா நிறுவனமோ அல்ல.

பப்ஜி முதலில் கணினியில் 2017 ஆம் ஆண்டு வெளியிிட்டது BLUEHOLE என்னும் ஒரு தென்கொரிய நிறுவனம் பிறகு அதனுடைய மொபைல் செயலியை 2018 இல் வெளியிடும் பொழுது சீன நிறுவனமான TENCENT இடம் லைசன்ஸ் அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டது.

அதாவது பப்ஜி கேம் தென்கொரிய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு அறிவு சார் பொருள். ஆனால் அதை எளிய முறையில் கூற வேண்டுமென்றால் ஒரு FEANCHISING முறை போல் லைசன்ஸிங அக்ரிமெண்ட் மட்டுமே

சீன நிறுவனத்துடன் போட்டுக்கொண்டு பப்ஜி கார்ப்பரேஷனில் ஒரு 10% பங்குகளையும் அதனிடம் கொடுத்து ஒரு பார்ட்னர் போல் சேர்த்துக்கொண்டது.

இதனால் அந்த சீன நிறுவனத்திடம் பயனாளர்களின் தகவல்கள் போகும் வழி ஏற்பட்டது. எனவே இந்திய அரசு பப்ஜி மொபைல் செயலியை தடை செய்வதாக தற்போது ஆணை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்தத் தடை பப்ஜியை கணினியிலோ PLAYSTATION இலோ விளையாட அல்லது பதிவிறக்கம் செய்ய இந்த தடைபொருந்தாது.

ஏனென்றால் பப்ஜி கணினி கேம் முழுக்க முழுக்க தென்கொரிய நிறுவனமான BLUEHOLEக்கு சொந்தமானது. அதைப்போல் அந்த தடை வந்து இரண்டு நாட்களுக்குள் பப்ஜி மொபைல் செயலி ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டது,

இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு பப்ஜி விளையாடுபவர்கள் இடமிருந்து சமூக வலைத்தளங்களான ட்விட்டர் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மற்றும் சிலர் இந்தத் தடையானது தற்பொழுது நீடித்து வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரோனா பிரச்சனைகளிலிருந்து மக்களையும் ஊடகங்களையும் திசை திருப்ப அரசு செய்யும் விஷயங்களுள் ஒன்றுதான் இது என்று கூறினர்.

ஆனால் இவை எவற்றுக்கும் பப்ஜி நிறுவனம் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. ஆனால் பப்ஜி நிறுவனம் இந்த தடை வந்ததால் சீன நிறுவனமான TENCENTட்டை நீக்கிவிட்டு இந்திய நிறுவனம் ஒன்றுடன் பார்ட்னர்ஷிப் வைத்து இந்தியாவில் மீண்டும் பப்ஜியை கொண்டு வந்துவிடும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையதளங்களில் பரவி வந்தது.

இதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால் இந்தியாவில் 5 கோடி பேருக்கு மேல் பப்ஜி விளையடுகின்றனர். இது கிட்டத்தட்ட 25%. எனவே அவ்வளவு சீக்கிரம் இவ்வளவு பெரிய சந்தையை விட்டு விட்டு போய்விட மாட்டார்கள் என்றும் சீன நிறுவனமான TENCENT உடனான உறவை முறிக்க நேரிடும் என்றும் பலர் அவர்களுடைய எதிர்பார்ப்பை கூரிவந்தனர்.

இறுதியில் தற்போது தடைக்கு பின் கிட்டத்தட்ட

ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 8ஆம் தேதிதான் பப்ஜி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் எதிர்பார்த்தது போலவே பப்ஜி நிறுவனம் என்ன கூறியது என்றால் பப்ஜி கார்ப்பரேஷன் இந்திய அரசின் விதிகளுக்கு கட்டுப்பட்டு பப்ஜி செயலியை இயக்க நினைக்கின்றது என்றும், இந்தியாவில் பப்ஜி கார்ப்பரேஷன் மற்றும் BLUEHOLE நிறுவனம் சீன நிறுவனமான TENCENTனுடன் இந்தியா வில் தனது உறவுகளை முறித்துக் கொண்டது என்றும் அறிவித்து உள்ளது. மற்றும் அதற்கு பதிலாக வேறு இந்திய நிறுவனத்துடன் கைகோர்க்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த செய்தியால் பப்ஜி விளையாடுபவர்கள் கூடிய விரைவில் பப்ஜி தடை நீங்கும் என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைப்போலவே பப்ஜி தடை செய்த பொழுது ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டன. ஆனால் அதன் இந்திய சர்வர்கள் தடை செய்த பின்னரும் தற்பொழுது வரை செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன அதை விளையாடுபவர்கள் விளையாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் OFFICIAL UPDATEகள் எதுவும் பண்ண முடியாது ஆனால் விளையாட முடியும். ஆனால் மறுமுனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட டிக் டாக் ஆப், ஆப் ஸ்டோர்களில் இருந்து மருனாளே நீக்கப்பட்டது மற்றும் அந்த செயலியை அடுத்த நாள் ஓப்பன் செய்து எவரும் பயன்படுத்த முடியாதது போல் இந்தியாவில் BLOCK செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM