மனிதர்களுடனான உரையாடல்களை குறிப்பாக இணையத்தில். வாயிலாக நடைபெறும் உரையாடல்களை விவாதங்களை சித்தரிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணினி நிரல், தொடர்பயன்பாட்டினையே chatbots என அழைப்பார்கள்
அதாவது இணையத்தின் வாயிலாக முகநூல் போன்ற குழுவிவாதங்களை குறிப்பிட்ட வியாபார நிறுவனத்தை பற்றிய குழுவிவாதமாக கொண்டுசெல்வதை chatbots என க்கூறலாம் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாக மேம்படுத்தபட்டு வெளியிடபட்டுள்ளது வருகின்ற 2025, ஆண்டிற்குள் 1.25 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு இதனுடைய வியாபார பயன்பாடு உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 1.அதிகரித்து வரும் வலைத்தளங்கள் மற்றும் கைபேசி பயன்பாடுகள் உயர் நுண்ணறிவு நுகர்வோர் ஈடுபாடுக்கான துரித வேகக் கோரிக்கை. நுகர்வோர் நடத்தை ஆகியவற்றை எளிதாக கொள்கின்றது. 2.இதில் இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் உள்ள கண்டுபிடிப்புகள். வாடிக்கையாளர்களுக்கான சேவை நடவடிக்கைகளாக உருவாக்கப்படுகின்றது. ஆகியவை இந்த chatbots ஐ நடைமுறைபடுத்திடுவதற்கான முக்கிய காரணிகள்
இந்த chatbots இன் வியாபாரத்திற்கான பயன்கள் பின்வருமாறு
1.வழக்கமான மின்னஞ்சல்கள் செய்திகடிதங்கள் அல்லது சமுதாயவலைபக்கங்களின் வாயிலாக முழுமையான விவரங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு சென்று சேராது ஆயினும் இது செயற்கை நினைவகத்தின் வாயிலாாக செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு எழும் அனைத்து சந்தேகங்களை தீர்வு செய்யக்கூடிய வகையில் முழுமையான விவரகையேடாக கையடக்க விலையில் இது வியாபார நிறுவனங்களுக்கு பயன்தருகின்றது
2. குறிப்பிட்ட வியாபார நிறுவனம் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் எந்தநேரத்திலும் எந்தஇடத்திலும் இதன் வாயிலாக கிடைக்கின்றது
3. வாடிக்கையாளர்களுடன் இடைமுகம் செய்வதற்காகவென தனியாக முகவர்கள் உதவியாளர்கள் போன்ற பல்வேறு பணியாளர்களை நியமனம் செய்து பயன்படுத்தி கொள்ளாமல் வியாபார நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் உற்பத்தியில் மட்டும் கவணம் செலுத்தினால் போதும் அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திடும்போதான செயல்களைநிருவகிப்பதற்காக தனியாக மனித தலையீடு இல்லாமலேயே வாடிக்கையாளர் திருப்தியுறும் சேவைகளை இதன் வாயிலாக நிருவகத்திடமுடியும்
4. வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்கனவே ஏதாவதொரு தேவைக்காக நிறுவனத்துடன் தொடர்புகொஂண்டபோது கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு அவரவர்களின் விருப்பத்திற்கேற்ற பொருத்தமான சேவையை அவர்கள் விரும்பியவாறு வழங்கபடுகின்றது
5. வாடிக்கையாளரின் ஆழ்ந்த ஈடுபாட்டினால் நிறுவனத்தின் விற்பணை பலமடங்கு உயரஉதவுகின்றது
இப்போதெல்லாம், நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் பணிச்சுமையின் செலவைக் குறைக்க, சிறந்த ஆதரவை வழங்க இந்த செயற்கை நினைவகத்தால் (AI )செயல்படும் முகவர்களை வியாபாரத்தின் வெற்றிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்













