வாகன ஓட்டிகள் இனி, டிரைவிங் லைசன்ஸ், ஆர்சி புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட வாகனம் சம்பத்தப்பட்டவைகளை காகித வடிவில் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. இந்த ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வைத்திருந்து, வாகனப் பரிசோதனையின் போது மொபைல் போனில் காண்பிக்க வழி செய்யும் மாற்றம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது
புதிய திருத்தங்களின் படி, மின்னணு முறையில் சரி பார்க்கக் கூடிய வாகனம் தொடர்பான எந்த ஆவணங்களையும், பரிசோதனையின் போது காகித வடிவில் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றின் டிஜிட்டல் வடிவை காண்பித்தால் போதுமானது. எனவே, வாகன ஓட்டிகள் தங்க வசம் ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை இனி, டிஜிட்டல் வடிவில் வைத்திருந்து மொபைலில் காண்பித்தால் போதுமானது. வழக்கமான போக்குவரத்து பரிசோதனைகள் மட்டும் அல்லாமல், வாகனம் தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்யப்பட வேண்டிய குற்றம் தொடர்பான சூழலிலும் இது பொருந்தும். மேலும், போக்குவரத்து மீறல் தொடர்பான மின்னணு செல்லான்கள் அரசின் வலைதளம் மூலம் வழங்கப்படும். எல்லாம் டிஜிட்டல்மயம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் செயல்பாடு மின்னணு முறையில் பதிவு செய்யப்படும். மீறல்கள், நிகழ்ந்த நாள், விசாரணை செய்த அதிகாரி பெயர் உள்ளிட்ட விவரங்கள அரசு தளத்தில் பதிவு செய்யப்படும். இதனால் மறுசோதனை செய்யும் அவசியம் இருக்காது அல்லது வாகன ஓட்டிகள் வீண் தொல்லைக்கு உள்ளாக வாய்ப்பில்லை என கருதப்படுகிறது.
டிஜிட்டல் லாக்கர் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காகித வடிவில் வைத்திருக்க வேண்டாம் என்பது வாகன ஓட்டிகளுக்கு ஆசுவாசம் அளித்தாலும், இந்த ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருப்பது எப்படி எனும் சந்தேகம் எழலாம். ஆவணங்களின் டிஜிட்டல் வடிவை அரசின் டிஜி லாக்கர் காப்பகம் அல்லது M-Parivahan செயலி மூலம் பராமரிக்கலாம். டிஜி லாக்கர் பெட்டகத்தில் உறுப்பினராகி ஓட்டுனர் உரிமத்தை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைக்கலாம். மற்ற முக்கிய ஆவணங்களையும் இதில் டிஜிட்டல் வடிவில் வைத்திருக்கலாம். வலைதளா முகவரி: https://digilocker.gov.in/ இதே போல, எம்-பரிவாஹன் ஆப்-லும் டிஜிட்டல் ஆவணங்களை பெற முடியும்.- ஆப் டவுன்லோட் செய்ய: mParivahan













