நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண்ணான பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. மேலும், பவ்யா லால், கடந்த 2005 முதல் 2020ம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக பணியாற்றி வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் அளப்பரிய அனுபவங்களைக் கொண்டுள்ள பவ்யா லால், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில், விண்வெளி தொழில்நுட்பம், கொள்கை உள்ளிட்ட துறைகளில் தலைமை பொறுப்பை வகித்து வந்துள்ளார்.
மேலும், அணுசக்தி பொறியியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை பிரிவில் முதுகலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.













