தினம் ஒரு திருக்குறள்

SOCIAL SHARE
Pin It

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

மு.வ உரை:

தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தில் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திய அமிழ்தம் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Translation:

Ambrosia in the sewer spilt, is word
Spoken in presence of the alien herd.

Explanation:

To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

 

ARUNACHALAM