தினம் ஒரு திருக்குறள்

SOCIAL SHARE
Pin It

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

மு.வ உரை:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.

Translation:
What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'.

Explanation:
What is called want of wisdom is the vanity which says, "We are wise".

ARUNACHALAM