இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது.
விழுப்புரத்தில் உள்ள அக்ரோடெக் நிறுவனம் தமிழகத்தில் மேலும் உளுந்தூர்பேட்டை திண்டிவனம் பாண்டிச்சேரி கள்ளக்குறிச்சி நாகர்கோயில் மார்த்தாண்டம் திண்டுக்கல் திருவாரூர் அரியலூர் மாவட்டங்களிலும் வெற்றிகரமாக கொடிகட்டி வரும் நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாகும்.
இந்நிறுவனம் விவசாய மேம்பாடு மற்றும் கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. மத்திய விவசாய அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்டுள்ளது இந்த நிறுவனம். அக்ரோடெக் நிறுவனத்தில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவருடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற பல்வேறு படிகட்டுகள் உள்ளன.
உதாரணமாக நிலமற்ற விவசாயிகளை கண்டறிந்து அவர்களை கைதூக்கிவிடும் விதமாக அவர்களிடம் இலவசமாக ஆடுகளை கொடுத்து, அதற்கு சிறப்பு பயிற்சிகள் அளித்து அந்த ஆடுகள் மூலம் வருவாயை பெருக்குவதுதான் நிறுவனத்தின் ஸ்மார்ட் திட்டமாக உள்ளது. மேலும் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் நாட்டு மாட்டு சாணத்தில் கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளித்து அதனை சந்தை படுத்தி வருமாணத்திற்கு வழிவகுக்கின்றனர்.
அந்த காலத்தில் விவசாயிகள் விவசாயத்தோடு சேர்த்து வீடுகளில் கால்நடைகளை வளர்த்தார்கள். இதனால் தற்சார்பு பொருளாதாரம் அவர்களிடம் மேம்பட்டு காணப்பட்டது. இதனையே காலத்திற்கு ஏற்ப டெக்னாலஜி உதவியுடன், மத்திய அரசின் திட்டங்களின் பங்களிப்புடன் அக்ரோடெக் நிறுவனம் புதுமையாக செய்து வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் நாட்டு கோழி குஞ்சுகள் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், அவற்றிற்கு மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் அக்ரோடெக் நிறுவனம் பார்த்து கொள்கிறது.













