இயற்கை வளம் பெருக்க கோடை உழவு

SOCIAL SHARE
Pin It

கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர், அதிகமாக நெல் பயிரை பயிரிடுகின்றனர்.

கோடை காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நெல் சாகுபடி செய்வதை சிலர் நிறுத்திவிடுவர்.

அவ்வாறு செய்யும் விவசாயிகள், தங்களின் நிலங்களை தரிசாக போடாமல், கோடை உழவு – புழுதி ஓட்டுதல் செய்து வைத்தால், நிலத்தில் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கு உதவும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

  • தரிசு நிலத்தை, கோடை உழவு செய்வதால், மண்ணில் புதைந்து இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்கலாம்.
  • வயலில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • மழை நீர் பிற வயலுக்கு செல்லாமல், ஈரப்பதத்தை தக்கவைக்கும். புல் வளர்வதை கட்டுப்படுத்தலாம்

கிணற்றில் சுரக்கும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி ஆண்டு முழுவதும் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, மிளகுதக்காளி கீரை, அகத்திக்கீரை விளைவிக்கப்படுகிறது. இதற்கு அதிக முதலீடும் தேவை இல்லை. கூலியாட்கள் பிரச்னையும் இல்லை.  ஒரு முறை நடவு செய்யப்படும் கீரை 15 நாளில் வளர்ந்து விடும். 15 நாளுக்கு ஒரு முறை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தலாம். கீரை விவசாயத்திற்கு இயற்கை உரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில வகை பூச்சி தாக்குதலை சமாளிக்க அதற்கான பொடிகளை பயன்படுத்தப்படுகிறது. மழை, பனி காலங்கள் கீரை சாகுபடி ஏற்றதல்ல.

அக்டோபர் முதல் ஜனவரி மாதங்களில் கீரை விளைச்சல் தடைபட்டு விடும்.  ஏக்கருக்கு ஒரு முறை 600 கிலோ வரை கிடைக்கும்.கீரைகளை மார்க்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்றால் மட்டுமே விற்பனை சாத்தியமாகும். இல்லையேல் வாடிப்போகும். ஆரோக்கியம் தரும் கீரைக்கு என்றைக்கும் மவுசுதான்.

ARUNACHALAM