அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக நாசாவின் ஜெட் புரோபல்ஷன் லேபரட்டரி என்கிற அமைப்பு முன்னதாக பேர்சேவேரன்ஸ் என்கிற சிறிய ரக ரோவரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சிறிய விமானம் ஒன்றை பறக்கவிட நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் மூன்று, நான்கு நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வெறும் 40 வினாடிகள் செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து சிறிது உயரத்துக்கு இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது.
இதன் புகைப்படங்களை பர்சிவியரன்ஸ் ரோவர் வெளியிடும். இதற்காகவே இந்த ரோவரில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













