மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 3000 மும் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 4 ஆயிரமும் பட்டப்படிப்பு படிப்போருக்கு ஆண்டுக்கு ரூபாய் 6 ஆயிரமும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்போருக்கு ஆண்டுக்கு ரூபாய் 7000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
படித்து முடித்து வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு மாதம் ரூ.450 முதல் ரூ.1000 வரை வழங்கப்படுகிறது. பிளஸ் டூ வரை படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 375 முதல் 750 வரை வழங்கப்படுகிறது பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.300 முதல் ரூ.600 வரை உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ. 10,000 வழங்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்பெஷல் ஃபீஸ் என்று சொல்லக்கூடிய சிறப்புக் கட்டணம் எதுவும் கிடையாது.
மாற்றுத்திறனாளியான ஆண் மாற்றுத்திறனாளியான பெண்ணையோ அல்லது ஒரு மாற்றுத்திறனாளி பெண். இன்னொரு மாற்றுத்திறனாளி ஆணையோ திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகையாக ரூபாய் 25 ஆயிரம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் 25 ஆயிரம் மதிப்பு உள்ளது மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. அடுத்ததாக சுயதொழில் தொடங்க விரும்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு மெழுகுவர்த்தி தயாரித்தல் போன்ற பல்வேறு சுய தொழில்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை வங்கி மூலம் கடன் பெறலாம்.
சிறு மற்றும் குறு தொழில் தொடங்குவோர் ரூபாய் 25 லட்சம் வரை வங்கியில் கடனாக பெற முடியும். விவசாயம் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. மொத்தம் 75 வகையான உதவித்தொகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசுகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.













