இரவு எட்டு மணிக்கு மேல் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..?

SOCIAL SHARE
Pin It

இரவில் தாமதமாக சாப்பிடுவது பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பெரும்பாலும், மக்கள் தங்கள் உணவு ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள இரவில் மோசமான உணவுகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக இனிப்பு வகை உணவுகள், கார்பனேட்செய்யப்பட்ட பானங்கள் அல்லது அதிக கலோரிகளைக் கொண்ட உப்பு சிற்றுண்டிகளை சாப்பிடுவது அதிக உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன. குறிப்பாக இவை வேகமான எடை அதிகரித்தலை ஊக்குவிக்கின்றன. எனவேதான் இரவு சாப்பாட்டை கட்டுப்படுத்த இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது எனக் கூறுகின்றனர்.

சமீப நாட்களாக எமோஷ்னல் ஈட்டிங் என்று சொல்லக்கூடிய கலாச்சாரம் பெருகிவிட்டது. அதாவது அதிகமாக மன அழுத்தத்தில் இருந்தாலோ அல்லது மகிழ்ச்சியில் இருந்தாலோ உடனே நன்கு சாப்பிட வேண்டும் என நினைக்கின்றனர். இதுபோன்ற உணர்ச்சிகள் இரவில்தான் அதிகம் வரும் என்பதால் இரவு நேரங்களில் அதிக உணவுகளை சாப்பிட முற்படுகின்றனர். எனவே இந்த எமோஷ்னல் ஈட்டிங் உடல் பருமனின் பேராபத்து என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுத் தேர்வு இரவில் சில உடல் நலப் பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். அதாவது இரவில் சாப்பிடும் இந்த உணவுகள் அஜீரணம், வயிற்று மந்தம், அசௌகரிய உணர்வு, ஃபுட் பாய்சன் போன்ற பிரச்னைகளுக்கும் காரணமாக அமைந்துவிடும். பகலில் சாப்பிட்டாலும் உடல் உழைப்பு இருக்கும். இரவில் சாப்பிட்டவுடன் தூங்கிவிடுவோம் என்பதால் கொழுப்பு சேர்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

ஆய்வுகள் கூறுவதைக் காட்டிலும் இதுபோன்ற பாதிப்புகள் இரவு தாமதமான உணவு உடல் பருமனோடு பல உடல் ஆரோக்கிய கேடுகளையும் விளைவிக்கின்றன. உடல் எடையை குறைக்க இரவில் தாமதமாக சாப்பிடுவது தவறு என்பது இப்போது தெளிவாகிறது.

மனித கடிகாரத்தின்படி உங்கள் உணவு அட்டவணையை வகுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு , சிறந்த செரிமானம் மற்றும் இரவில் தடையற்ற தூக்கத்திற்கு, படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள். பெரும்பாலான சுகாதார வல்லுநர்களும் இதைத்தான் பரிந்துரைக்கின்றனர். மேலும், உங்கள் தினசரி கலோரிகளின் அளவைக் கண்காணிக்கவும், வொர்க்அவுட்டுக்கு சிறிது நேரம் ஒதுக்கினால் தூக்கம் நன்கு வரும்.

ARUNACHALAM