விதைகளுக்குள் ஒரு விருட்சம் ஒளிந்திருக்கிறது என்று கூறுவதுண்டு. உண்மைதான் அதோடு விதைகளுக்குள் மருத்துவம் ஒளிந்திருக்கிறது என்றும் கூறலாம்.
சத்துக்களின் சேமிப்புக்கிடங்கு என்று விதைகளைச் சொல்வார்கள். நாம் இங்கே சில விதைகளைப்பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் காண்போம்.
எள்
எள் எள்ளின் விதை மிகவும் சக்தி நிறைந்தது. எள்ளில் இரும்புச் சக்தி அதிகம் உண்டு. பருவம் எய்தி பெண்களுக்கு எள் உருண்டையைச் செய்து தரும் வழக்கம் இந்தியாவில் கிராமப்புறங்களில் உண்டு. எள்ளில் கால்சியம் சத்தும் உள்ளது. புரதச் சத்தும், வைட்டமின் பி 6 ம் எள்ளில் உண்டு. நல்லெண்ணெய் பண்டைக்காலம் தொட்டே தமிழர்களின் பயன்பாட்டில் இருந்து வருவதை அறிவோம்.
எள்ளில் பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். தற்போது வெளிநாட்டின் அறிவியல் ஆய்வுகள் எள்ளில் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை அதிகம் உள்ளதாக கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது. எள்ளில் டிடாக்ஸிகே1ன் எனப்படும் நச்சுத் தன்மையை அகற்றும் தன்மை உண்டு. கேன்சர் நோயாளிகள் இதை அவசியம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
திராட்சை விதைகள்
கறுப்புத் திராட்சை விதைகளுக்கும் அதன் தோலுக்கும் புற்றுநோயை விரட்டும்குணம் உண்டு. புற்றுநோயை வளர்க்கும் செல்களைத் தடுக்கும் குணம் உண்டு. கறுப்புத் திராட்சையை உப்புகலந்த நீரில் ஊற வைத்து, அதன் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் கெமிக்கலை முதலில் சுத்தப்படுத்திக்கொண்டு, அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ்போல் குடித்து வரலாம். வயிறு தொடர்பான நோய்களுக்கும் திராட்சை சாறு அரும் மருந்தாகும்.
முருங்கை
முருங்கை விதைக்கு நீர்த்துப் போன விந்தனுவைக் கட்டும் தன்மை உண்டு. உடலுக்கு பலம் தரக்கூடியத. முருங்கை விதையை பசுநெய்யில் பொரித்து, பொடி செய்து செய்து பாலில் கலந்து குடித்துவர நல்ல பலன் கிட்டும். 5 கிராம் அளவிற்கு பொடியைக் கலந்து குடிக்கலாம். சிலருக்கு வயிற்றோட்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
மாதுளை
மாதுளை விதைகளைக் காயவைத்து, கருஞ்சீரகம் சேர்தது பொடி செய்து, நெய் சேர்த்து உண்டு வர கருப்பைப் புண்கள் ஆறும். மாதுளம் பழத்திற்கு இதயத்திற்கு பலம் தரும் தன்மை உண்டு. அதன் தோல்களுக்கும் ஆற்றல் உண்டு. அதையும் காய வைத்துப் பொடி செய்து சாப்பிட்டு வரலாம். வயிறு தொடர்பான நோய்களுக்கு நல்லது.
கழற்சிக்காய் விதை
கழற்சிக்காய் விதைக்கு உடலில் உள்ளே மற்றும் வெளியே இருக்கும் கட்டிகளைக் கரைக்கும் தன்மை உண்டு. இதன் விதை கெட்டித்தன்மையாய் இருக்கும். மேலோட்டினை உடைத்து வெள்ளைநிறத்தில் இருக்கும் விதையை எடுத்து உடைத்து பௌடராக்கி வைத்துக்கொள்ளலாம். ஐந்து கிராம் அளவு தேனில் கலந்து அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இனிப்பு நீரைக் கட்டுப்படும். கர்ப்பபை நீர் கட்டிகளை நீக்கி குணப்படுத்தும்.
துளசி விதை
துளசி விதையை 2 கிராம் அளவு எடுத்து குளிர்ந்த நீர் விட்டு அரைத்துக் கொடுக்க குழந்தை பிறந்தபின் அடிவயிற்றில் உண்டாகும் குத்தல் நீங்கும். குத்திருமல் தணியும். துளசி விதையை குளிர்ந்த நீரில் ஊறவைத்து, அந்நீரைப்பருக, வெள்ளைப்படுதல் நீங்கும்.
நாயுருவி விதை
நாயுருவி விதையைப் பொடீத்த நன்கு சலித்து கால் ஸ்பூன் அளவு பாலில் கலந்து குடித்து வர நரம்புகள் பலப்படும், அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடையைக் குறைக்கும், இனிப்பு நீரைக் கட்டுப்படுத்தும்.
திருநீற்றுப் பச்சிலை விதை
குளிர்பானங்களில் இவ்விதைகளை ஊற வைத்திருப்பர். இதனை சாப்ஜா என்று கடைகளில் சொல்வார்கள். இவ்விதையை பாலில் ஊற வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துப் பருகிவர வெய்யிலினால் உண்டான அசதி நீங்கும். உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி தீரும், குடல் புண்கள் ஆறும். கண் புகைச்சல் கட்டுப்படும்.
பருத்தி விதை
இவ்விதைகளை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து பனைவெல்லம் சேர்த்துப் பருகுவார்கள். தமிழகத்தில் காலை வேலைகளில் கடைகளில் சூடான பருத்திப் பால் கிடைக்கும். குடிப்பதற்கு சுவையாகவும் இருக்கும். மலச்சிக்கல் குணமாகும், உடலுக்கு புஷ்டியைத் தரும். இருமல் மறையும்.
பூசணி விதை
வெண்பூசணி விதை உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் அதிகப்படியான பித்தத்தை தணிக்கும் . பூசணி விதையை அரைத்து, பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வர உடல் எடை கூடும்.
பரங்கி விதை
பரங்கி விதையை காயவைத்துப் பொடித்து 2 டீஸ்பூன் அளவு 2 கிளாஸ் நீர்விட்டு கொதிக்க வைத்து அரை கிளாஸாக சுண்டியவுடன் வடிகட்டிக் குடிக்க வெள்ளைப் போக்கு குணமாகும். சிறுநீரைப் பெருக்கும்.
பப்பாளி விதை
பப்பாளிவிதைகளை 1 டீஸ்பூன் அளவு எடுத்து காயவைத்து இடித்து நீர் விட்டு கஷாயம்போல் காய்ச்சி, வாரம் ஒருமுறை கொடுக்க, குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் கீரிப்புழுக்கள் வெளியேறும். ஆசன வாய் அரிப்பு சரியாகும்.













