ஒரு செயலைத் திரும்பத் திரும்ப செய்து வரும்போது அது உங்களுக்குப் பழக்கமாகிவிடும். இப்பழக்கம் தொடரும்போது அது உங்களுக்கு இயல்பாகிவிடும்.
வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் தினசரி கடைபிடிக்கும் ஐந்து பழக்கங்கள் என்னவென்பதை பார்ப்போம்..
1. காலையில் ஆறு மணிக்கு முன்னே எழுந்து விடுங்கள். ஏனெனில் காலையில் எழும் போது உங்களின் சுற்றுச் சூழல் மிக அருமையானதாக இருக்கும். காற்றும் தூய்மையானதாக இருக்கும்.
2 இரண்டாவதாக மேற்கொள்ள வேண்டிய பழக்கம் என்னவென்றால் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள. உங்ளுக்கு என்ன வயது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. முதியவர்களாக இருந்தாலும் குறைந்த பட்சம் நடைபயிற்சி செய்து வரலாம்.
3. தியானத்தைக் கற்றுக¢கொள்ளுங்கள் சில நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். உடல் பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் மனதுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக தியானம் அமைகிறது.
4. ஏதேனும் ஒரு புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். அது உங்கள் தொழில் தொடர் புடையதாக இருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் பிடித்த சப்பெஜ்க்டாக இருக்கலாம். தினசரி ஒரு பதினைந்து பக்கங்களாவது வாசிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். இப்படி வாசிக்கும்போது நீங்கள் ஒரு மாதத்தில் இரண்டு புத்தகத்தை முழுமையாய் வாசித்து விடுவீர்கள். வருடத்திற்கு 24 புத்தகங்கள். இப்படியாக நீங்கள் நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
5. ஐந்தாவதாக தினசரி படுக்கையில் உறங்கச் செல்லும்முன் அன்றைய நாளில் உங்களுடைய செயல்பாட்டினைப் பற்றிய கண்ணோட்டம் விடுங்கள். யோசித்துப் பாருங்கள். இதனால் உங்களைப் பற்றிய ஒரு சுய மதிப்பீட்டினை செய்து கொள்வீர்கள். எது சரி எது தவறு என்பதை யோசிக்கும் போது அறிந்து கொள்வீர்கள். அன்றாடம் இப்படி சுயமதிப்பீட்டினை செய்து வரும்போது ஒரு வருடத்தில் உங்கள் குணமே மாறிவிடும். எது சரி எது தவறு என்பது இயல்பாகவே உங்களுக்கு தெரிந்து விடும்.













