உலகளவில் வளர்ந்து வரும் இளம் தலைவர்கள்; இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்வு

SOCIAL SHARE
Pin It

நியூயார்க் நகரத்திலிருந்து வாரம் ஒருமுறை வெளியாகும் செய்தி இதழ் ‘டைம்’ ஆகும். உலகம் முழுவதும் மிக அதிகமானோரால் படிக்கப்படும் இந்த இதழ் மூலமாக உலகம் முழுவதும் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க கூடிய சிறந்த இளம் தலைவர்கள் 100 பேர் குறித்து பட்டியல் தயார் செய்தது. அதில் 6 பேர் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ஒரு இந்தியர் மற்றும் ஐந்து இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். 'பீம் ஆர்மி' அமைப்பின் தலைவர் சந்திர சேகர ஆசாத் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஒரே இந்தியர். இவரைத் தவிர, ஐந்து இந்திய வம்சாவளியினர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 'டுவிட்டர்' சமூக வலைதளத்தின் வழக்கறிஞர் விஜய் கட்டே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் நிதி அமைச்சர் ரிஷி சுனாக், 'இன்ஸ்டாகார்ட்' நிறுவனர் அபூர்வா மேத்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அரசு சாரா அமைப்பான கெட் அஸ் பி.பி.இ. யின் செயல் இயக்குனர் மற்றும் டாக்டர் ஷிகா குப்தா அவர்களும், அரசு சாரா அமைப்பான ‘அப்சால்வ்’ அமைப்பின் நிறுவனர் ரோஹன் பவுலுரி ஆகியோரும் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்க கூடிய இளம் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ARUNACHALAM