குழந்தை பிறந்த 2 மணி நேரத்தில் வேலை வாங்கிய முதலாளி - சப் கலெக்டர் விசாரணை

SOCIAL SHARE
Pin It

காங்கேயத்தில், தேங்காய் களத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு குழந்தை பிறந்த இரண்டு மணி நேரத்தில், பணி செய்ய சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டைச் சேர்ந்தவர் வெற்றி - கவிதா, தம்பதியினர்  குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம், கீரனுாரில் உள்ள நிறுவனத்தில், தேங்காய் உடைத்து, உலர்த்தும் வேலை செய்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியான கவிதாவுக்கு, 12ம் தேதி காலை, தேங்காய் களத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தேங்காய் கள நிர்வாகிகள், கவிதாவை மருத்துவமனைக்கு அனுப்பாமல், தொடர்ந்து வேலை செய்ய அறிவுறுத்தியதால், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பின், தேங்காய் உடைக்கும் பணியை கவிதா செய்து வந்தார்.

தகவலறிந்த சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு சென்று, கவிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

''இது குறித்து, சப் - கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

ARUNACHALAM