ஆதார் அட்டையை PAN உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும். மார்ச் 31 க்குள் ஆதார் பான் உடன் இணைக்கப்படாவிட்டால், PAN செயலிழக்கச் செய்யப்படலாம். இதற்குப் பிறகு, இதை உபயோகித்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
மார்ச் 31 க்கு முன், பல பணிகளை செய்து முடிப்பது அவசியமாகும். 2020-21-க்கு தாமதமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2021 ஆகும். எந்தவொரு வணிக ஆண்டிற்கும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் வருமானத்தை தாக்கல் செய்யலாம். இருப்பினும், தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்வதால், நீங்கள் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.
2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான அட்வான்ஸ் வரியின் நான்காவது தவணையை மார்ச் 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒருவரது வரி ஒரு வருடத்தில் ரூ.10,000 க்கும் அதிகமாக இருந்தால், அவர் 4 தவணைகளில் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரியை ஜூலை 5, செப்டம்பர் 15, டிசம்பர் 15 மற்றும் மார்ச் 15 க்கு முன் செலுத்த வேண்டும். இருப்பினும், தொழில்முறை வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நேரடி வரி தகராறு தீர்க்கும் திட்டமான ‘பேச்சுவார்த்தை மூலம் நம்பிக்கை’-யின் கீழ், விவரங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை மார்ச் 31 வரையும் கட்டணம் செலுத்துவதை ஏப்ரல் 30 வரையும் நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வரி சிக்கல்களை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.













