இலங்கையில் புர்கா அணிய தடை

SOCIAL SHARE
Pin It

இலங்கையில் கடந்த 2019ல் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு  சிறுபான்மையினர்களான முஸ்லிம்கள் மீதான அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து  வருகின்றன. அந்த வகையில், தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை  கொண்டு வரப்பட இருக்கிறது.

உள்நாட்டின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மறைக்கும்  புர்கா அணிய தடை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி  அளித்து விட்டது. முந்தைய காலங்களில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகள்  புர்காக்களை அணியவில்லை. இந்த மத தீவிரவாதத்தின் அடையாளம்  சமீபத்தில்தான் தோன்றியது.

எனவே, அதற்கு நாங்கள் கட்டாயம் தடை  விதிப்போம்.தேசிய கல்விக் கொள்கையை மீறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இஸ்லாமிய பள்ளிகளான மதரசாக்களுக்கும் தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ARUNACHALAM