எவர்கிரீன் கப்பலின் இந்திய மாலுமிகளுக்கு வீட்டுக் காவலா?

SOCIAL SHARE
Pin It

சீனாவின் எவர் கிவன் கப்பல் கடந்த மார்ச் 23 அன்று சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து சென்றது. கடும் காற்றினால் 22 ஆயிரம் டன் எடை, 400 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் கால்வாயின் ஓரம் இழுத்துச் செல்லப்பட்டு தரைதட்டி குறுக்காக நின்றது. முக்கிய கடல் வழி பாதை தடைபட்டதால் அவ்வழியில் 300-க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது.

கப்பல் தரை தட்டி சென்றதால் அதன் அடியில் ஏராளமான மணல் சேர்ந்துவிட்டது. அதற்காக மாஷ்அவர் எனும் மண்ணை அகழ்ந்து வெளியேற்றும் கப்பல் பயன்படுத்தப்பட்டது. இது மணிக்கு 700 யூனிட் மணலை வெளியேற்றும் திறன் கொண்டது. சுமார் 10 ஆயிரம் யூனிட் மணல் மற்றும் சேறு மாஷ்அவர் கப்பல் மூலம் அகற்றப்பட்டது. இதற்காக பணியாளர்கள் இரவும் பகலும் உழைத்தனர். கப்பலின் ஒரு பாதி மட்டும் மிதந்தது. அதனால் கப்பலின் பின் பாதி மிதந்தது. முன் பகுதி மணலில் சிக்கியபடியே இருந்தது. இதனால் இழுவை படகுகளால் கப்பலை இழுக்க முடியவில்லை.

ஞாயிறன்று முழு நிலவு வந்ததால் ராட்சத அலைகள் சூயஸ் கால்வாயில் எழும்பின. அது சாதகமான சூழலை ஏற்படுத்தியது. மீட்பு பணியில் ஈடுபட்ட போஸ்காலிஸ் நிறுவனம் சக்தி மிக்க 2 இழுவை படகுகளை பயன்படுத்தியது. அது தவிர சூயஸ் கால்வாய் நிறுவனம் 11 இழுவை படகுகளை பயன்படுத்தி கப்பலை மிதக்க வைத்தனர். கப்பல் மீட்கப்பட்டதால் பலரும் மகிழ்ச்சியடைந்தாலும், கப்பல் மாலுமி உட்பட 25 இந்திய பணியாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் விசாரணையில் தெரிய வரும் வரை அவர்களை வீட்டுக்காவலில் வைக்க வாய்ப்புள்ளது என்றும் சூயஸ் கால்வாய் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ARUNACHALAM