விஞ்ஞானிகளைத் தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல விஷயங்கள் நம் பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளைகள் மிக முக்கியமானவை. பல விண்வெளிப் பொருட்கள் மற்றும் அம்சங்களைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீங்காமல் உள்ளன. இப்போது, ஒரு அண்ட நிகழ்வு வானியலாளர்களை உலுக்கியுள்ளது!
தொலைதூரத்தில் இருந்த ஒரு விண்மீன் பேரடைஸ் அதாவது கேலக்சியில் அமைந்திருப்பதாக முன்னர் நம்பப்பட்ட ஒரு மிகப்பெரிய கருந்துளை திடீரென மறைந்துவிட்டது.
“A2261-BCG” என அழைக்கப்படும் கேலக்சி அதன் கருந்துளையை இழந்துவிட்டதாக தெரிகிறது. விஞ்ஞானிகள் (Scientists) இப்போது அந்த கருந்துளை விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள்.
இதற்கு முன்னர் மனிதர்களால் கண்டறியப்பட்ட எந்த கருந்துளையும் மறைந்ததாக பதிவோ குறிப்போ இல்லை.
கேலக்சியில் (Galaxy) எங்கிருந்தோ வெளிப்படும் ஒரு பேராற்றல் வாய்ந்த சக்தி இந்த மிகப்பெரிய கருந்துளை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கருந்துளையை வெகு தொலைவிற்கு தள்ளும் அளவுக்கு அந்த சக்தி ஆற்றல் மிக்கதாக இருந்திருக்கும்!
சமீபத்தில், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு அமெரிக்க வானியல் சொசைட்டி ஜர்னலில் கருந்துளைகளை மறுவடிவமைப்பது குறித்து ஒரு ஆய்வை வெளியிட்டது.
ஒரு கருந்துளையை அதன் நிலையில் இருந்து தள்ளுவதற்கு ஒரு பெரிய சக்தி தேவைப்படுகிறது. மேலும் விஞ்ஞானிகள் இது இரண்டு மிகப்பெரிய கருந்துளைகளின் மோதல் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அப்படியிருந்தும், இதை நிரூபிப்பது கடினமாக உள்ளது. ஏனெனில் இரண்டு மிகப்பெரிய கருந்துளைகளின் மோதலை நாம் இதுவரை கவனித்ததில்லை, அதற்கு எந்த சாட்சியும், பதிவும் இல்லை.













