கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெல்ர்போன் நகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தனிமைப்படுத்தபட்ட ஓட்டலில் தொற்று பாதிப்பு பரவியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விக்டோரியா மாகாணம் முழுவதும் 5 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மெல்போனில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, போட்டி தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்படும் என்று விக்டோரியா மாகாண அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













