Editor's Choice

ஓராண்டுக்குள் டோல்கேட்டுகள் நீக்கப்பட்டு ஜி.பி.எஸ்., முறையிலான சுங்க கட்டணம் அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது பற்றி பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஓர் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என உறுதியளிக்கிறேன். அதற்கு பதில் ஜி.பி.எஸ் வழியாக கட்டண வசூல் நடக்கும். ஜி.பி.எஸ் இமேஜிங் முறையில் பணம் பெறப்படும்.” என்றார். மேலும், “93 சதவீத வாகனங்கள் பாஸ்டேகைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துகின்றன. மீதம் 7 சதவீத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்திய போதும் பாஸ்டேகை எடுக்கவில்லை” என்றார்.

வாகனங்களில் பாஸ்டேக் பொருத்தாவிட்டால், ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். சுங்கச்சாவடிகளில் 2016 முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது கடந்த பிப்.,16 முதல் கட்டாயமானது. இதன் மூலம் சுங்கச்சாவடிகள் நெரிசல் ஓரளவு குறைகிறது. பாஸ்டேக் இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

Editor's Choice

கொரோனா பரவலால் உலகமே பின்னோக்கி சென்றுவிட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், வைரஸ் பரவலை தடுக்க, மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதுமே தீர்வு என உலகம் இயங்கி வருகிறது. விமானத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், லாண்டன் கிரியர் என்ற 24 வயது பயணி ஒருவர் விமானத்தில் செய்த அட்டூழியம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்.பி.ஐ அறிக்கையின் படி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில், சியாட்டிலிருந்து டென்வருக்கு பயணித்த கிரியர், விமான பயணத்தின் போது மாஸ்க் அணிய முடியாது எனக்கூறி சக பயணிகளுடனும், விமான பணிப்பெண்களுடனும் வாக்குவாதம் செய்திருக்கிறார். தொடர்ந்து அநாகரிகமாக, அனைவரின் முன்னிலையிலும், தனது சீட்டில் சிறுநீர் கழித்திருக்கிறார். பணிப்பெண் ஒருவர், அவ்வாறு செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுக்க, நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என சண்டை செய்திருக்கிறார்.

விமானம் டென்வரில் தரையிறங்கியதும் புகாரை பெற்ற போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணையில், பயணத்துக்கு முன்பு தான் நான்கு பியர்களை குடித்ததாகவும், விமானத்தில் நடந்ததும், விமான ஊழியரை தாக்கியதும் தனக்கு நினைவில் இல்லை என்றும், சீட்டில் சிறுநீர் கழித்தது தெரியவில்லை எனவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தற்போது 10 ஆயிரம் டாலர் பிணைத்தொகையில் அவர் ஜாமின் பெற்றிருக்கிறார்.  இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2,50,000 அமெரிக்க டாலர் அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Editor's Choice

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டுவென்டி– 20 போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டர் ரோஹித் சர்மா, இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் பின் அமர்ந்து, மறைத்து வைத்து உணவு சாப்பிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டுவென்டி – 20 கிரிக்கெட் தொடர் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் பதிலடி தந்த இந்திய அணி, வெற்றி பெற்று தொடரை 1–1 என சமன் செய்திருக்கிறது.

இந்த தொடர் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடந்து வந்த நிலையில், அடுத்த போட்டியில் இருந்து பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆமதாபாத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்திருப்பதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது டுவென்டி – 20 போட்டியில், இந்திய அணியின் துணை உதவியாளர் ஒருவரின் பின்னால், ரோஹித் சர்மா மறைந்து கொண்டு உணவு சாப்பிடும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

Editor's Choice

ஒருவர் மீதான அன்பை, வெளிப்படுத்த பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம், அந்தகாலம் முதலே மனிதர்களிடையே இருந்து வருகிறது. தற்போது நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப அது டாட்டூவாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிடித்தவர்களின் இன்சியல், பெயர், எமோஜிக்கல் மற்றும் படங்களை டாட்டூ குத்திக் கொள்வது இப்போது பேஷனாக மாறி உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர், தனது உடலில் 98 சதவீதம் டாட்டூ குத்தி அனைவரையும் அதிசயிக்க வைத்திருக்கிறார். தன்னை ஒரு காந்தம் என்று அழைத்துக் கொள்ளும் வொல்ப்காங் கிர்ச், என்ற இந்த ஜெர்மன் ஓய்வூதியதாரர், தனது கால்களின் பாதங்களில் மட்டும் டாட்டூ குத்தி கொள்ளவில்லை.

பெர்லினில் அஞ்சல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 20 ஆண்டுகளாக டாட்டூ குத்தி வருகிறார். முதன் முதலில் கடந்த 1989 ஆம் ஆண்டு, பெர்லின் சுவர் தகர்ப்பின் போது டாட்டூ குத்தி கொண்டாராம். தபால் நிலையத்தில் பணியாற்றிய போது, தன்னால் டாட்டூ குத்தி கொள்ள முடியவில்லை என்று கூறும் கிர்ச், தனது முகம், கைகள், உடல், முதுகு மற்றும் கால்கள் என ஒவ்வொன்றிலும் டாட்டூ குத்துவதற்காக, 720 மணி நேரம் ஊசியின் கீழ் அமர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து கிர்ச் கூறுகையில், ‘என் 46 வயதில் முதலில் நான் டாட்டூ குத்தினேன். அப்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. டாட்டூ குத்துவதற்காகவே 25 ஆயிரம் யூரோக்கள் செலவு செய்திருக்கிறேன். கண் புருவங்களையும் கருப்பு நிறத்தில் டாட்டூ குத்தியிருக்கிறேன். கால்களின் பாதங்களில் மட்டுமே இன்னும் நான் டாட்டூ குத்தவில்லை. தெருவில் நான் நடந்து செல்லும் போது பலர் என்னிடம் ஆட்டோகிராப் கேட்கிறார்கள். என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்புகின்றனர்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்.

Editor's Choice

சீனத் தலைநகர் பெய்ஜிங் அடர்த்தியான மஞ்சள் புகைமூட்டத்தால் மூடப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான மணற் புயல் கோபி பாலைவனத்திலிருந்து வந்தது தான் இந்த மாசுபாட்டிகு காரணம்.

பெய்ஜிங் நகரவாசிகள் தூசி மற்றும் மணலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கண்ணாடி, முககவசங்கள் மற்றும் ஹேர்நெட்களைப் பயன்படுத்தினர். இந்த மணற்புயலால், மக்கள் பயன்பாடு இல்லாத தடைசெய்யப்பட்ட நகரம் போல் காட்சியளித்ததோடு, நகரின் பல பகுதிகள் மணற்புயலால் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இதர நிகழ்வுகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு நகர அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், முடிந்தவரை உள்ளே இருக்குமாறு பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

வடக்கு மங்கோலியாவிலிருந்து வடக்கு சீனா முழுவதும் பரவியுள்ள இந்த மணற் புயலால் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக சீன வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த மணற்புயலால் பலர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகியுள்ளது.

வானளாவிய கட்டிடங்களை மிகுந்த பிரகாசத்துடன் கட்டியெழுப்பிய பெய்ஜிங் குடியிருப்பாளர்கள், இந்த மணற்புயலின் உடல்நல அபாயங்கள் குறித்து வருத்தப்பட்டனர். இது தலைநகரில் காற்று மாசுபாட்டை அபாயகரமான அளவான பிஎம் 2.5 அளவிற்கு அதிகரித்துள்ளது.

பெய்ஜிங் கடந்த ஆண்டு அதன் மறு காடழிப்பு முயற்சிகளால் வடக்கு சீனாவில் குறைந்த மற்றும் பலவீனமான மணல் புயல்களைத் தாக்கும் என்று எதிர்பார்க்கிறது.

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் சுகாதார நிபுணர் பான் சியாச்சுவான், சமீபத்திய மழை அல்லது பனி இல்லாததால் காற்று கூடுதளாக வறண்டு இருப்பதாகவும், இதுவே மணற் புயலை மிகவும் கடுமையானதாக ஆக்கியதாகவும் கூறினார்.

 

Editor's Choice

அமெரிக்காவில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட, கனடாவை சேர்ந்த யூடியூபர் லில்லி சிங், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாஸ்க் அணிந்து வந்தார். அவரது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். கடுங் குளிர், கொட்டும் மழை, வாட்டி வதக்கும் வெயில் என எதுவும் பார்க்காமல், கடந்த 120 நாட்களுக்கும் மேலாக, டில்லி எல்லையை முற்றுகையிட்டு அவர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த மாதம் ஹாலிவுட் பிரபலம் ரிஹானா, சமூக ஆர்வலர் மலாலா உள்ளிட்ட பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, இது உலக அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கிராமி விருது வழங்கும் விழா நடந்து முடிந்தது.

இதில் கலந்து கொண்ட கனடாவை சேர்ந்த யூடியூபரான லில்லி சிங், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாஸ்க் அணிந்து வந்திருந்தார். அந்த மாஸ்க்கில், ‘நான் விவசாயிகளுக்க ஆதரவாக நிற்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, 40 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ள அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

பக்கம் 10 / 74