1997ஆம் வருடம் காடு மல்லிகார்ஜுனா கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பூமியில் தோண்டும் வேலை நடைபெற்ற பொழுது ஒரு நந்தி சிலை தென்பட்டிருக்கிறது.
அதை மேலும் அகழ்ந்தபோது ஒரு கோயில் பூமிக்குள¢ இருப்பதை கண்டிருக்கின்றனர்.உள்ளே முதலில் தென்பட்டது நந்தி சிலை. நந்தியின் முகம் தென்திசை நோக்கி இருந்தது அதற்கு முன¢புறம் கீழ் பகுதியில் ஒரு நீர்க்குளம் இருந்திருக்கிறது. கிழே ஒரு சிவலிங்கமும் இருந்திருக்கிறது.
நந்தி தென்முகமாக இருப்பதினால் இதை தக்ஷிணமுக நந்தி என்றழைக்கின்றனர். இந்த நந்தியின் வாய்ப்குதியில் மண்ணினால் மூடப்பட்டிருந்தது. அதை சுத்தம் செய்தபோது அதிலிருந்து நீர் ஊற்ற ஆரம்பித்திருக்கிறது. அந்நீர் கீழே உள்ள சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வது போல் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. அபிஷேகப்பிரியரான சிவனை தொடர்ச்சியாய் வருடம் முழுவதும் அபிஷேகம் செய்யும் வண்ணம் நந்திசிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். சிலர் 7000 வருடத்திற்கு முந்தைய கோயில் இது என்றும் சொல்கிறார்கள்.
இக்கோயிலின் வடிவமைப்பு ஆச்சரியப்படத் தக்கவகையில் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இக்கோயிலை அமைத்தவர் ராவ் பகதூர் மல்லப்பா செட்டியார் என்று பெங்களுரு இதிகாசம் என்ற நூலில் குறிப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
இக்கோயிலின் எதிர்புறம் கங்கம்மா ஆலயம் அமைந்துள்ளது.













