ஆந்திரப்பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கணிப்பாக்கம். இங்கே அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோயில் பிரசித்திப் பெற்றது.
இந்த விநாயகர் கோயிலுக்கு கதை ஒள்று சொல்லப்படுகிறது. சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் நடநத கதை அது. கோயிலும் பழைமையானதுதான்.
அப்போது காணிப்பாக்கத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்கள் உடல் குறை உள்ளவர்கள். ஒருவர் ஊமை, ஒருவர் செவிடு, மூன்றாமவர் கண்பார்வையற்றவர்.
இவர்களுக்குப் பரம்பரையான நிலம் ஒன்னேகால் ஏக்கர் இருந்தது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஒரு முறை வானம் பொய்த்து, ஏரி, குளம், கிணற்று நீரும் வற்றிப் போனது. . இந்தச் சகோதரர்கள் மூவரும் தங்கள் கிணற்றில் இறங்கி கிணத்தை ஆழப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஒருநாள் கடப்பறைப் பட்டு டிங் என்று சத்தம் கேட்டிருக்கிறது. என்னவென்று பார்க்கும் போது விநாயர் சிலை ஒன்று குப்புற வாக்கில் கிடந்திருக்கிறது. அதன¢ பின்னந் தலையில் கடப்பாரை பட்டதினால் இரத்தம் பெருகியிருக்கிறது. இதனால் அந்தப் பள்ளத்தில் கிடந்து நீர் செந்நீராகிவிட்டிருகிறது.
விநாயகருக்கு உயிர் இருக்கிறதா என்று மூவரும் அதிர்ந்து போய் அவசர அவசரமாக விநாயகர் சிலையை கிணற்றை விட்டு மேலே தூக்கி வந்திருக்கின்றனர். மேலே வந்தவுடன் கண்பார்வையற்றவருக்கு பார்வைத் திறன் வந்திருக்கிறது. உடனே அவன் ஊமையிடம் பேசிப்பார் என்று சொல்ல அவன் பேச ஆரம்பித்திருக்கிறான். இவர்கள் பேசுவது காது கேளாதவனுக்கு விளங்கியிருக்கிறது. விநாயகர் அருளால் தங்கள் மூவருக்கும் உடல் குறை நீங்கிவிட்டது என்று சகோதரர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இதற்குள் ஊர் மக்களும் அங்குக் கூடிவிட்டனர். அந்த விநாயகரை அங்கிருந்த மரத்தடியில் வைத்து வணங்கி வழிபாட்டினை மேற்கொண்டு,இந்த ஊருக்கு ஒரு ஆறு வேண்டும் கணேசா என்று நடக்காத ஒன்றை எண்ணி வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் விநாயகர்தான் வரசித்தி விநாயகர் ஆயிற்றே, ஒரிசா ராமகிரி மலையில் உற்பத்தியாகி ஓடி வந்த யஹுதா நதியை காணிப்பக்கம் வழியாக ஓடி கடலில் கடக்கும்படி கட்டளையிட்டார். ஒரு கடும் மழைகாலத்தில் ஆற்றின் போக்கு மாறி காணிப்பாக்கம் வழியாக கடலில் போய் கலந்தது. அதன் அந்த ஊரில் பஞ்சம் மறைந்து போனது.
அதன்பின் அதன்பின் வரசித்தி விநாயகர் அந்த ஊரின் சத்யப்பிராமண அதிகாரி ஆனார். யாராவது உண்மையை ஒப்புக் கொள்ளவில்லையென்றால் இவர் அந்த நபரைக் கொண்டு வந்து சத்யபிரமாணம் செய்யும் வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது. பொய் சொன்னவர்களுக்கு கடும் தண்டனை வழங்கிவிடுவார் என்ற பயம் இருப்பதால் எல்லோரும் உண்மையை ஒப்புக் கொள்வார்களாம்.
11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியும் இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. வரசித்தி விநாயகரின் மகிமையைக் கேள்விப்பட்ட குலோத்துங்கன் சுயம்பு விநாயகருக்கு பஹூதா ஆற்றங்கரை ஓரமாக கோயிலை எழுப்பியிருக்கிறார்.. அதன்பின் விஜயநகர பேரரசர்களான ஹரிஹரர் மற்றும் புக்கரால் புதிய மண்டபங்களும், கோயில் பரப்பளவு அதிகரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்ட காலத்தில், சித்தூர் நீதி மன்றத்தில், கோணிப்பாக்கம் விநாயகர் கோயிலின் சத்யப்பிரமாணம் தனி சாட்சியாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்னும் இக்கோயிலில் சத்யபிரமாணம் நடைபெறுகிறது. பாதிக்கப்பட்டவர் இங்கு வந்து சத்ய பிரமாணத்திற்கு பணம் செலுத்தி ரசீது வாங்கிக் கொள்கிறார். எதிரணி நபருக்கும் தகவல் அனுப்பப்படுகிறது. யார் தவறு செய்திருந்தாலும் விநாயகர் முன் நின்று சத்யபிரமாணம் செய்யும் போது உண்மையை ஒத்துகொள்கிறார்களாம்,.













