- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 227
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த நவோமி ஒசாகாவுக்கு 10 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த நவோமி ஒசாகாவுக்கு 10 லட்சத்து 86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உலகில் 1.1 மில்லியன் மக்களுக்கு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன.
2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் புகைபிடிப்பதால் உயிரிழந்ததாக புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது. 2019க்கு பிறகு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் பேர் புகைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் படி, 25 வயதிற்குள் இளைஞர்கள் புகைபிடிப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள், இது இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய சாபக்கேடு.
20 நாடுகளில் ஆண்களுக்கும் 12 நாடுகளில் பெண்களுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆசிய கண்டத்தில் மூன்றில் ஒருவர் புகைப் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இந்த கொடிய பழக்கத்தால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு. இந்தியா, அதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியா, ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஜப்பான், துருக்கி, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இளம் வயதினரை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை அரசாங்கங்கள் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. 20 முதல் 25 வயதிற்குள் இந்த பழக்கத்தை பழகாவிட்டால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.
"இளைஞர்கள் தங்கள் 20 களின் நடுப்பகுதியில் புகைப் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்வது அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்தை தீவிரமாக குறைக்கும்" என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விளம்பரப்படுத்துவதற்கான தடையை ஆன்லைன் ஊடகங்களுக்கும் நீட்டிப்பது அவசியம் என்றும் சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகள் (flavoured cigarette) மற்றும் இ-சிகரெட்டுகள் (e-cigarettes) போன்ற ஒத்த தயாரிப்புகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"சில நாடுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், புகையிலை தொழில் (tobacco industry) மற்றும் அரசியல் காரணங்களால், உலகளாவிய புகையிலை கட்டுப்பாடு குறித்த அறிவுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு நீண்ட மற்றும் தொடர்ச்சியான இடைவெளி ஏற்பட்டுள்ளது".
பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரல் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரகசிய திருமண விழாவில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தனது காதலியான கேரி சைமண்ட்ஸை திருமணம் செய்து கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விருந்தினர்கள் மிக குறைவான அளவிலேயே விழாவிற்கு அழைக்கப்பட்டனர்.
COVID-19 கட்டுப்பாடுகள் காரணமாக, இங்கிலாந்தில் திருமணங்களில் தற்போது 30 பேருக்கு மட்டுமே அங்கேற்கலாம் என்ற விதி உள்ளது. பிரதமர் ஜான்சன் மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் டவுனிங் தெருவில் உள்ள ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு, திருமணத்திற்கு முன்பே, ஒரு வயது மகன் வில்பிரட் உள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவராக இருந்த காலத்தில் சைமண்ட்ஸ் ஜான்சனை சந்தித்தார். அவர் இப்போது ஒரு கடல் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
போரிஸ் ஜான்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்தபோது தனது முதல் மனைவி அலெக்ரா மோஸ்டின்-ஓவனைச் (Allegra Mostyn-Owen) சந்தித்தார், அவர்கள் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர். 1993 ஆம் ஆண்டில் விவாகரத்தானது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் வீலரை மணந்தார்.
வக்கீலான மெரினா வீலருடனான திருமணம் செப்டம்பர் 2018 அன்று விவாகரத்தானது. அவர்களுக்கு லாரா, மிலோ, காஸ்ஸி மற்றும் தியோடர் ஆகிய நான்கு வளர்ந்த குழந்தைகள் உள்ளனர்.
போரீஸ் ஜான்சனுக்கு வயது 56 தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள பெண்ணுக்கு வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போட்டாச்சா? கோவிஷீல்டா, கோவாக்சினா என்று கேட்கும் அளவுக்கு தற்போது விழிப்புணர்வு வந்திருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீரம் அல்லது பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், பயோகான் உள்ளிட்ட பார்மா கம்பெனிகள் குறித்து தெரிந்த அளவுக்கு தடுப்பூசி நிறுவனங்கள் குறித்து நமக்கு தெரியாது என்பதே உண்மை.
ஆனால், தடுப்பூசி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் 45 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருகிறது.
சில நாள்களுக்கு முன்பு வந்த தகவல் ஆச்சர்யமளித்தது. 2020-ம் ஆண்டில் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய நிறுவனங்களில் அதிக லாப வரம்பு உள்ள நிறுவனமாக சீரம் திகழ்கிறது.
கேபிட்டல்லைன் என்னும் நிறுவனம் இந்தத் தகவலை வெளியீட்டிருக்கிறது. 2020-21-ம் நிதி ஆண்டில் 418 நிறுவனங்கள் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி உள்ளன. இதில் அதிகபட்சமாக சீரம் நிறுவனத்தின் லாப விகிதம் 41.3 சதவிகிதமாகும். அதாவது ரூ.5,446 கோடி வருமானத்தில் ரூ.2,251 கோடி அளவுக்கு லாபம் ஈட்டி இருக்கிறது.
ஆனால் ரூ.5,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் பார்மா நிறுவனங்களின் நிகர லாபம் குறைவாகவே இருக்கிறது. அதிகபட்ச லாப விகிதம் 28 சதவிகிதம் மட்டுமே.
பூனாவாலாவின் குடும்பம் பெரிய குதிரை பண்ணை வைத்திருந்தார்கள். குதிரையின் ஆன்ட்டிடாக்ஸின் சீரம் (Antitoxin serum) மூலமாகத் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்கள். 1966-ம் ஆண்டு ரூ.5,00,000 முதலீட்டில் இந்த நிறுவனத்தைத் தொடங்குகினார் சைரஸ் பூனாவாலா.
நமக்கெல்லாம் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகுதான் சீரம் நிறுவனம் குறித்து தெரியும். ஆனால், அதற்கு முன்பாகவே தடுப்பூசி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆண்டுக்கு 150 கோடி டோஸ் தடுப்புசி தயாரிக்கும் திறன் உடையது இந்த நிறுவனம். சர்வதேச அளவில் 170 நாடுகளுக்கு பல விதமான நோய்களுக்கு தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது. போலியோ, மூளைக்காய்ச்சல், தட்டம்மை உள்ளிட்ட பல நோய்களுக்கான தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு சீரம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும்.
பக்கம் 10 / 90



