- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 252
சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள எவர்கிரீன் கப்பலில் பணிபுரியும் மாலுமிகள் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் கப்பல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சீனாவில் இருந்து கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்து நாட்டிற்கு எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ம் தேதி சூயஸ் கால்வாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கரையில் மோதி குறுக்கே நின்றது. கால்வாயின் குறுக்காக கப்பல் சிக்கிக் கொண்டதால் மற்ற கப்பல்கள் சென்று வர முடியாமல் அப்பகுதியில் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனிடையே எவர் கிரீன் சரக்கு கப்பலை ஓட்டியவர்கள் அனைவரும் இந்தியர்கள் என கப்பலை நிர்வகிக்கும் பெர்ன்ஹர்ட் ஷூல்ட் ஷிப்மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் கப்பலில் பயணித்த 25 பேரும் இந்தியர்கள் எனவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் வழி பாதையில் ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதியாக சூயஸ் கால்வாய் முக்கிய இடம் பெறுகிறது. தற்போது எவர் கிரீன் கப்பல் சிக்கி உள்ளதால் மாற்று பாதையாக ஆப்பிரிக்காவின் தென் முனைக்கு சென்று ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டும். இந்தவழியாக செல்லும் போது மேலும் இரண்டு வாரங்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் தாமதம் ஏற்படும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையை தொடர்ந்து, பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், வரும், 1ம் தேதி முதல் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளத
தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.
ஆனாலும், இணைப்புக்கு உள்ளான பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. அவை, நாளடைவில் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய, எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பக்கம் 4 / 74



