Editor's Choice

இந்தியா - சீனா இடையே ஒரு இணக்கமான சூழல் இல்லை. எல்லை பிரச்னை தொடர்பாக இரு நாடுகளுக்கும் எல்லையில் அவ்வப்போது சண்டை நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட சீன வீரர்கள் அத்துமீறினர். இந்தியாவும் பதிலடி கொடுத்தது. இதில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டன. அதன்பின் சீனா நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும், இரு நாட்டு இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயங்களும் முன்பை விட குறைந்தன.

'தி நேஷனல் கேபிடல் ரீஜன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்' ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தின் கீழ், டில்லி - மீரட் இடையான ரயில் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் நியூ அஷோக் நகரிலிருந்து, சஹிபாபாத் வரையிலான 5.6 கி.மீ. சுரங்க ரயில்பாதை அமைக்கும் பணி சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சீன அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளையும், எதிர்ப்புகளையும் காட்டி வரும் மத்திய அரசு, இந்த ரயில்வே பணியை சீன நிறுவனத்திடம் வழங்கி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த பணியை சீன நிறுவனத்திற்கு வழங்க கூடாது என்ற குரல்கள் சமூகவலைதளமான டுவிட்டரில் ஒலிக்க தொடங்கி உள்ளது. பலரும் #BoycottChina என்ற ஹேஷ்டாக்கை தேசிய அளவில் டிரெண்ட் செய்கின்றனர்.

டில்லி - மீரட் இடையே ரயில் பாதை திட்ட பணியை சீன நிறுவனத்திற்கு வழங்கியது ஏற்படையது அல்ல. சீனா எதிர்ப்பு இயக்கத்தின் தேசிய உணர்வுகளுக்கு இது மிகவும் மோசமான எடுத்துக்காட்டு. சீன ஆப்களை தடை செய்தனர், சீன பொருட்களை தடை செய்வோம் என மக்கள் மனதில் விதைத்தனர். ஆனால் இப்போது ரயில் பணியை சீன நிறுவனத்திற்கு வழங்கி உள்ளனர். சீன பொருட்களை புறக்கணிப்போம், மேக்இன் இந்தியாவை உருவாக்குவோம் என சொன்னது என்னாச்சு? போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Editor's Choice

கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி, படித்து முடித்ததும் பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலைக்கு செல்வது அதிகரித்து உள்ளது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், லண்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தனர்.கடந்த ஆண்டு உலகம் முழுதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலால், வெளிநாடுகளில் பணிபுரிந்த இளைஞர்கள், அங்கு கடந்த பல மாதங்களாக வேலையின்றி, வீடு, அறைகளில் முடங்கி கிடக்கின்றனர். பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். தற்போது, மீண்டும் கொரோனா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் உருமாறி பரவி வருவதால், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அதே பணிக்கு தற்போது திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும், புதியதாக, பல்வேறு கனவுகளுடன் வெளிநாட்டில் வேலைக்கு போக காத்திருந்த இளைஞர்களின் கனவும் கேள்வி குறியாகியுள்ளது.

உலக நாடுகளில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், எல்லா நாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன.எனவே, ஒவ்வொரு நாடும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க, அதிக ஆர்வம் காட்டுகின்றன.வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றன.மேலும், கொரோனாஅச்சத்தால், சொந்த ஊர் திரும்பிய பலர், மீண்டும் அதே நாட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

Editor's Choice

‘சொந்தமாக வீடு வைத்துக் கொள்ள மாட்டேன்’ என்று கடந்தாண்டு மே மாதம் எடுத்த சபதத்தை நிறைவேற்றும் விதமாக, உலகின் 2வது பணக்காரரான எலான் மஸ்க் தனது வீடுகளை விற்றுத் தள்ளி வருகிறார்.

உலகளவில் புகழ் பெற்ற ‘டெஸ்லா’ கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்.  ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை உருவாக்கி, விண்ணுக்கு சொந்தமாக ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறார். இன்றைய நிலையில் உலகின் 2வது மிகப்பெரிய பணக்காரர் இவர்தான். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 12.21 லட்சம் கோடி. இவர் சற்று வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர். அதிரடியான முடிவுகளை எடுப்பதிலும், வித்தியாசமான சபதங்களை எடுப்பதிலும் பெயர் போனவர். இவர் விண்ணில் ஏவிய தனது நிறுவனத்துக்கு சொந்தமான ‘பால்கன் ஹெவி’ பரிசோதனை ராக்கெட்டில் கூட, தனது டெஸ்லா  நிறுவனத்தின் சிகப்பு நிற ரோட்ஸ்டெர் காரை வைத்து அனுப்பினார். அதன் ஓட்டுனர்  இருக்கையில் ஸ்டார்மேன் என்ற பொம்மை உட்கார வைக்கப்பட்டு இருந்தது.

இவர் கடந்தாண்டு மே மாதம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ‘எனக்கு சொந்தமாக வீடு வேண்டாம்’ என்ற கொள்கையை எடுத்து இருப்பதாக அறிவித்தார். இதற்காக, தன்னிடம் உள்ள அனைத்து நிலங்களையும், வீடுகளையும் விற்கப் போவதாக அறிவித்தார். அதோடு நில்லாமல், அதை நிறைவேற்றும் செயலிலும் இறங்கி விட்டார்.  கடந்தாண்டு ஜூனில், பெல் ஏர் பகுதியில்  இருந்த தனது வீட்டை சீன கோடீஸ்வரருக்கு 29 மில்லியன் டாலருக்கு விற்றார்.

கடந்தாண்டு அக்டோபரில் தனது எஸ்டேட்டை ஹாலிவுட் நடிகர் ஜெனி வில்டருக்கு விற்றார்.  கடந்த மாத தொடக்கத்தில்தான் அமெரிக்காவின் டெக்சாசுக்கு சென்று குடியிருக்க போவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், லாஸ் ஏஞ்செல்ஸ் அருகே பெல்ஏர் பகுதியில் இருந்த தனது 3 வீடுகளையும் 40.9 மில்லியன் டாலருக்கு அவர் விற்பனை செய்துள்ளார். அவருடைய  இந்த செயல், உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Editor's Choice

650 அடி உயர மலை உச்சியில் காதலை வெளிப்படுத்தும்போது காதலர்கள் மேலிருந்து தவறி விழுந்தனர். இதில் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆஸ்திரியா நாட்டின் கரீந்தியா நகரில் 27 வயது நபர், தனது 32 வயதுடைய காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்த எண்ணியுள்ளார். வித்தியாசமான முறையில் காதலை உணர்த்துவதற்காக அங்குள்ள பால்கெர்ட் என்ற மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். 650 அடி உயர மலை உச்சியில் நிற்க வைத்து தன் காதலியிடம் கூறியபோது, காதலி துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது, மலையில் இருந்து காதலி தவறி விழுந்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத அவரது காதலர், தனது காதலியை காப்பாற்ற அவரை பிடிக்க முயற்சி செய்கையில் அவரும் தவறி விழுந்துள்ளார். இதில் காதலி, கீழே படர்ந்திருந்த அடர்ந்த பனிக்கட்டிகள் மீது விழுந்தார். அசைவுற்று கிடந்த பெண்ணை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்ததால் அவருக்கு உரிய சிகிச்சையளித்து உயிருடன் மீட்டனர். காதலர், மலையில் இருந்து 50 அடி ஆழத்தில் இருந்த மலை முகட்டில் சிக்கியிருந்தார். காதலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அவருக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

Editor's Choice

புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டாலும், அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புகையிலைப்  பொருட்கள் குறித்த தயாரிப்பு, வர்த்தம் மற்றும் விற்பனை தொடர்பாக ஏற்கனவே பல சட்டங்கள் இருந்தாலும், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான  2003ம் ஆண்டு சட்டத்தில் தற்போது மத்திய அரசு முக்கிய திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய மசோதா தாக்கல் செய்ய வசதியாக முன்மொழிவை அரசுக்கு அனுப்பி உள்ளது.

 ‘சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18 என்பதில் இருந்து 21 ஆண்டுகளாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (வர்த்தக மற்றும் வர்த்தக, விளம்பரம் தடை மற்றும் ஒழுங்குமுறை, உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) திருத்தச் சட்டம், 2020 வரைவை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, சிகரெட் அல்லது பிற புகையிலை பொருட்கள் 21 வயதுக்குட்பட்ட எவருக்கும் விற்கப்படாது.

கல்வி நிறுவனங்களின் 100 மீட்டர் சுற்றளவில் இந்த தயாரிப்புகளின் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இந்த திருத்த மசோதாவில் சிகரெட்டு அல்லது எந்தவொரு புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்துதான் விற்கப்பட வேண்டும். அதாவது, சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை சில்லறை விற்பனையில் விற்க அனுமதிக்கப்படாது. விதிகளை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம். இரண்டாவது முறையாக இதைச் செய்ததற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பகுதியில் புகைபிடித்ததற்காக அபராதத்தை ரூ.200 லிருந்து ரூ .2000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஊடகங்களிலும், சிகரெட் மற்றும்  புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரம் வந்தாலோ, அத்தகைய விளம்பரங்களில்  நடித்தாலோ, அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Editor's Choice

இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் (செபி) பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2007ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 சதவீத பங்குகள் வீழ்ச்சி அடைந்த நேரத்தில் அதனை வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகே‌‌ஷ் அம்பானி மற்றும் மும்பை எஸ்இஎஸ் நிறுவனம், நவிமும்பை எஸ்இஎஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு அபராதம் விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி, முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி, நவிமும்பை எஸ்இஎஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடி, மும்பை எஸ்இஎஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 70 கோடி ரூபாய்க்கு செபி அபராதம் விதித்துள்ளது.

பக்கம் 57 / 74