Editor's Choice
அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு இந்திய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த 4 வயது மகள் பால்கனியில் அழுதுகொண்டிருந்த சம்பவம், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.
 
மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி.
 
இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்லிங்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். ஆரத்தி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

ஆரத்தி தம்பதியரின் மகள் வீட்டின் பால்கனியில் நின்று அழுதுகொண்டு இருந்திருக்கிறாள்.

இதைக்கண்டதும் அக்கம்பக்கத்தினர் என்னவோ ஏதோ என பதறிப்போய் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, பாலாஜியும், ஆரத்தியும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
 
போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
கணவன், மனைவி இருவருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆரத்தியை, பாலாஜி கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அதே கத்தியால் தானும் குத்திக்கொண்டு தற்கொலை செய்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
 
இந்த பயங்கர சம்பவம் அந்தப் பகுதியை உலுக்கியெடுத்துள்ளது.
 
இதுபற்றி அம்பாஜோகையில் உள்ள பாலாஜியின் தந்தையும், தொழில் அதிபருமான பரத் ருத்ரவாருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
உள்ளூர் போலீசார் நடந்த துயர சம்பவம் குறித்து எனக்கு தெரிவித்தனர். என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின்னர் அது பற்றிய தகவல்களை தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
 
என் மருமகள் 7 மாத கர்ப்பிணி. நாங்கள் அமெரிக்கா சென்று அவர்களுடன் இருந்து விட்டு வந்தோம். மீண்டும் அமெரிக்காவுக்கு அவர்களை பார்க்கச்செல்ல திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில்தான் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. இதன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியராகத்தான் இருந்து வந்தார்கள்.
 
எல்லா சட்டநடைமுறைகளும் முடிந்து அவர்களது உடல்களை எடுத்து வர 10 நாட்கள் வரை ஆகலாம். எனது பேத்தி, எனது மகனின் நண்பர் வீட்டில் இருக்கிறாள். என் மகனுக்கு அங்கு நிறைய இந்திய நண்பர்கள் உள்ளனர்.
 
Editor's Choice

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 10.4.2021 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

* சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

* அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

* இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது. 

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Editor's Choice
Tiruchirappalli Ordnance அதிகாரபூர்வ இணையதளத்தில் Electronics(04) காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 
அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கு கல்வித்தகுதியாக 10th Pass கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள்.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Karur) கொடுக்கப்பட்டுள்ளது. 

தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Tiruchirappalli Ordnance 

பணியின் பெயர் : Electronics

கல்வித்தகுதி : 10th Pass

பணியிடம் : Karur

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 04

கடைசி நாள் : 18.04.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் :https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

Editor's Choice

ஒரு நகரில் வசிக்கும் அனைவரிடமும் கார்கள் இருப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், ஒரு நகரில் வசிக்கும் அனைவரிடமும் சொந்தமாக விமானம் இருக்கிறது. இதைக்கேட்டால் யாராலும் நம்ப முடியாது. ஆனால் இது உண்மையான ஒரு செய்தி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் தங்கள் விமானத்தை அலுவலகத்திற்கும் பிற வேலைகளுக்கும் எடுத்துச் செல்கிறார்கள். 

இந்த விமான நிலையம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இந்த நகரத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் விமானிகள் ஆவர். அப்படியிருக்க, அனைவரது வீட்டிலும் ஒரு விமானம் இருப்பது பொதுவான விஷயம்தான். விமானிகளைத் தவிர, இந்த நகரத்தில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரும் உள்ளனர். விமானிகள் மட்டுமல்லாமல், இவர்களும் தங்கள் வீடுகளில் விமானங்களை வைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்களுக்கு விமானங்கள் மீது எவ்வளவு காதல் என்றால், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் அனைவரும் கூடி உள்ளூர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள்.

ஹவாயில் ஒரு விமானத்தை சொந்தமாக வைத்திருப்பது ஒரு காரை வைத்திருப்பதற்கு சமமாகும். காலனியின் தெருக்களிலும், மக்கள் வீடுகளுக்கு முன்னால் உள்ள ஹேங்கர்களிலும் இங்கே விமானங்களைக் காணலாம். ஹேங்கர் என்பது விமானங்களை நிறுத்துவதற்கான இடமாகும். இந்த நகரத்தின் சாலைகளும் அகலமாக உள்ளன. இதனால் விமானிகள் அதை ஓடுபாதையாகப் பயன்படுத்தலாம்.

அமெரிக்காவின்  இந்த நகரத்தில் விமானங்களின் சிறகுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க, சாலை அடையாளங்கள் மற்றும் லெட்டர்பாக்ஸ்கள் இயல்பை விட குறைந்த உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன. இந்த நகரத்தில், வீதிப் பெயர்களும் விமானங்கள் தொடர்புடையவையாக வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு சாலைக்கு போயிங் சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Editor's Choice
Ministry of Tribal Affairs அதிகாரபூர்வ இணையதளத்தில் PGT, TGT, Principal காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 
வெளியாகி உள்ளது.

வேலைக்கு கல்வித்தகுதியாக PG Degree, Master Degree, Bachelor Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Madurai) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  
நிறுவனம் Ministry of Tribal Affairs
பணியின் பெயர் :PGT, TGT, Principal
கல்வித்தகுதி :PG Degree, Master Degree, Bachelor Degree
பணியிடம் : All Over India
தேர்வு முறை : Interview
மொத்த காலிப்பணியிடம் : 3479
>கடைசி நாள் :30/04/2021

முழு விவரம் : https://www.jobs7.in/assets/files/jobs/5833-ministry-of-tribal-affairs-recruitment-2021-pgt-notification.pdf
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
Editor's Choice
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில், கொரோனா விதிகளை மதிக்கத்தவறிய அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்-க்கு  போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
 
நார்வே நாட்டில் இருமுறை பிரதமராக பதவி வகித்துள்ள எர்னா சொல்பேர்க் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தனது  60-வது பிறந்த நாளை கொண்டாடினார். நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், 10- க்கும் மேற்பட்டோர் விழாக்களில் பங்கேற்க அனுமதி இல்லைஎன்று நார்வே அரசு அறிவித்தது.  
 
ஆனால், இந்த கட்டுப்பாடுகளை மீறி  தனது குடும்ப உறுப்பினர்கள் 13-க்கும் மேற்பட்டோருடன் பிறந்த நாளைக் கொண்டாடியதால் பிரதமருக்கு 20 ஆயிரம் நார்வே கிரவுன்ஸ் தொகையை அபராதமாக போலீசார் விதித்துள்ளார்.  நார்வே நாட்டில் இதுவரை 1,01,960 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பக்கம் 48 / 90