- பொதுச் செய்திகள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 149
இந்தியாவில் உள்ள, 8 முக்கியமான நகரங்களில், வீடுகள் விற்பனை, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட, 44 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்க் இந்தியா’ தெரிவித்துள்ளது.
8 நகரங்களில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் தேவை அதிகரித்ததை அடுத்து, 72 ஆயிரம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இந்த விற்பனை அதிகரிப்பானது, கட்டுமான நிறுவனங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
மும்பையில், 49 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. புனேவில், 75 சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு மாநிலங்களை பொறுத்தவரை, பெங்களூரில் 18 சதவீதமும்; ஐதராபாத்தில் 81 சதவீதமும்; சென்னையில் 36 சதவீதமும் அதிகரித்துஉள்ளது.
இருப்பினும், கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது இந்த துறையின் வளர்ச்சியை பாதிக்கும் அளவுக்கு இருக்குமா என்பது இனி தான் தெரியவரும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, "திருமதி இலங்கை அழகி" ஆக தேர்வு செய்யப்பட்டார்.
உலக அழகி போட்டியில் கிரீடத்தை பெற்ற கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியுள்ளது.
போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு - கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.இதற்கிடையே, "திருமதி இலங்கை" கிரீடம் புஷ்பிகா டி சில்வாவிற்கு, மீண்டும் வழங்கப்பட்டது.
தனது கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டவர்கள் மீது தனக்கு எந்தவித கோபமும் கிடையாது என புஷ்பிகா தெரிவித்தார்.
திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும் இந்த தருணத்தில், அழகி போட்டிகளில் மாத்திரம் ஏன் அவர்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெண்ணொருவரை வீழ்த்துவதற்காக, யாராவது ஒருவர் முயற்சிகளை மேற்கொள்வாராயின், அது அவருக்கான வெற்றி கிடையாது எனவும் கூறும் அவர், அதுவே அவரின் தோல்வி எனவும் தெரிவித்துள்ளார்.
தெரிவித்தார். தனது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் புஷ்பிகா டி சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், 2036ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அதிபர் பதவியில் தொடர தேவையான சட்டத்திற்கு புதின் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது. இந்தச் சட்டத்தை மாற்றி, ஒருவர் நான்கு முறை வரை தொடர்ந்து அதிபர் பதவியில் இருக்கும் சட்டத்தை புதின் கடந்தாண்டு முன்மொழிந்தார். இது குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதையடுத்து இந்தச் சட்டத்திற்கு புதின் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
இந்தச் சட்டத்தின் மூலம் அடுத்த இரண்டு தேர்தல்களில் புதினால் தேர்தலில் போட்டியிட முடியும். அதாவது 2036ஆம் ஆண்டு வரை அதிபர் ரேசில் அவரால் இருக்க முடியும். உயிருடன் இருக்கும் வரை அதிபர் பதவியில் தொடரவே புதின் இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
ரஷ்யா அதிபராக புதின் கடந்த 2000ஆம் ஆண்டு முதலில் பதவியேற்றார். அதன் பின்னர் 2004இல் மீண்டும் அவர் தேர்தலில் வென்றார். அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபராக இருக்க முடியாது என்பதால் 2008இல் தனது நம்பிக்கைக்குரிய டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரை அதிபராக்கினார். அப்போது தான் அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியின் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்துக் கொண்டே வருகிறது. கொரோனா நெறிமுறையை முழுமையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களை டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பலர் விதிகளை சரியாக பின்பற்றவதில்லை.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் பொருந்தும். ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இந்த உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் பகல் நேரங்களில் வெளியே வர தடை உத்தரவு உள்ளிட்ட கடுமையான தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 30 வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும்.
பகலில் ஊரடங்கு போடுவதில் ஏன் அரசுக்கு தயக்கம் என்ற ரீதியில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கொரோனா வைரஸ் இரவு நேரத்தில் மட்டுமே தான் வரும்... பகல் நேரத்தில் வராது... இது ஒரு நல்ல முடிவு என இரவு ஊரடங்கை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்
பக்கம் 51 / 90



