Editor's Choice

பெண் நீதிபதிக்கு காண்டம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா,  தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என தீர்ப்பளித்தார்,.

5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.

இந்த சர்ச்சை தீர்ப்புகளுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. .இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி வலைத்தளங்களில் வைரலாகவே பலர் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

பெண் நீதிபதி சில சர்ச்சை தீர்ப்புகளை கொடுத்திருப்பார் அதற்காக அவரை அவமதிப்பது தவறு என்றும், இதைவிட நல்ல பரிசு தரமுடியாது, ஆனால் நீதிமன்றங்கள் அந்த பெண்ணுக்கு தண்டனை கொடுக்கும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

 

Editor's Choice

உத்தரப்பிரதேச மாநில அரசு வித்தியாசமான முன்முயற்சியை எடுத்துள்ளது. மாநில காவல்துறையும், அரசும் இணைந்து எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தவறான விஷயங்களுக்காக இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் முன்முயற்சி இது. 

தற்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adhithyanath) தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளின்படி, ஒருவர் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை (pornographic) தேடினால், அந்த நபரின் விவரங்கள் காவல்துறைக்கு நேரடியாக சென்றுவிடும். 

இது பிரச்சனையின் ஆணிவேரையே சரி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆபாச தகவல் தேடும் நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறைக்கு தெரிந்துவிடும்.  உடனே, 1090 என்ற எண்ணில் இருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்.எம்.எஸ் வரும்.

இந்த நடவடிக்கை, மனோரீதியாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். தங்கள் தவறு வெளியில் தெரியாது என்பதாலே தான் பலர் இணைய குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என உத்தரபிரதேச மாநில காவல்துறை கூறுகிறது.

’டிஜிட்டல் சக்ரவாயு’ (Digital Chakravayu) என்ற திட்டத்தின் மூலம், பெண்களுக்கான (Women) டிஜிட்டல் ரோட்மேப்பையும் (Digital Roadmap) உத்தரப்பிரதேச அரசு உருவாக்கியுள்ளது. முதலில் 6 மாவட்டங்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Editor's Choice

அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும்  தெரிகிறது.

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration (NASA)), கிழக்கு பெருவில் ஏராளமான தங்கம் இருப்பதாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station (ISS)) இருந்து, எக்ஸ்பெடிஷன் 64 (Expedition 64) இன் குழு உறுப்பினர் எடுத்த புகைப்படங்கள் இவை. அதில் அமேசான் ஆறுகள் மற்றும் பள்ளங்கள் தெரிகின்றன.

பொதுவாக விண்வெளி வீரரின் பார்வையில் இருந்து மேக மூட்டம் அல்லது சூரியனின் பளபளப்பான புள்ளியால் அவை மின்னி, பிரதிபலிக்கின்றன. பிரதிபலிப்பதன் எதிரொலியாக இந்த புகைப்படத்தில் அற்புதமாக தெரிகிறது சூரிய ஒளியில் மின்னும் பொன்.

பெருவின் மேட்ரே டி டியோஸ் மாநிலத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளில் நதியும் குழிகளும் தென்படுகின்றன.

மிகவும் ஈரமான இந்த இடத்தில், நூற்றுக்கணக்கான குழிகள், நீர் நிரப்பப்பட்ட படுகைகளாக காணப்படுகின்றன. சுயாதீன சுரங்கத் தொழிலாளர்களால் இவை தோண்டப்பட்டிருக்கலாம், சேற்று மண்ணின் தாவரங்கள் நிறைந்த பகுதிகளால் இந்த பள்ளங்கள் சூழப்பட்டுள்ளன.

காடாக இருந்து அழிக்கப்பட்ட இந்தப் பகுதிகள், பண்டைய நதிகளைப் போலவே இருக்கின்றன, அவை தங்கம் உட்பட பல்வேறுவிதமான வண்டல்களைக் குவிக்கின்றன.

உலகின் தங்க உற்பத்தியில் ஆறாவது இடத்தில் உள்ளது பெரு நாடு. அதிலும் குறிப்பாக, மாட்ரே டி டியோஸ் (Madre de Dios) உலகிலேயே மிகப்பெரிய  தங்க சுரங்கத் தொழில்களைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும்.

சுரங்கத் தொழிலே இப்பகுதியில் காடுகள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதோடு, தங்கத்தை பிரித்தெடுக்கும் செயல்முறையினால், பாதரச மாசுபாடும் அதிகரிக்கிறது.  

ஆயினும் பதிவு செய்யப்படாத சுரங்கத் தொழில்களில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்தத் தொழிலையே நம்பி இருக்கின்றனர்.  

சிறிய நகரமான நியூவா அரேக்விபா (Nueva Arequipa) தெற்கு இன்டர்சோனிக் நெடுஞ்சாலையில் இருந்தே புலப்படக்கூடியது. 2011 இல் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை பிரேசிலுக்கும் பெருவுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பு ஆகும்.

இது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவைத் தூண்டும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் இது, காடுகளை அழிப்பதற்கு முக்கியமான அடிப்படை காரணமாகிவிட்டது. மக்கள் வந்து போவதற்கு வசதியாக இருப்பதால், இங்கு தங்கத்தை எடுப்பதற்கு பெரிய வழி கிடைத்துவிட்டது.

தம்போபாட்டா தேசிய ரிசர்வ் (Tambopata National Reserve) போன்ற  சில பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதால், அங்கு சுரங்கத் தொழில்கள் நடைபெறுவதில்லை.

Editor's Choice

பிளாஸ்டிக் மீதான தடைகள் போடப்பட்டாலும், தினமும் பல லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பை கடலில் கலந்து வருகின்றன. இதனால், உலகக் கடல் பரப்பில், எங்கே, எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன என்பதை கண்டுபிடிப்பதே கடலியல் வல்லுனர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், கடலின் மேற்பரப்பை விமானத்திலிருந்து படம் பிடித்து தந்தால், அதை அலசி, பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும் பகுதிகளை துல்லியமாக கணித்து தரும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ஸ்பெயினின் பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடலோனியா கடற்கரை பகுதிக்கு அப்பாலுள்ள, கடல் பரப்பின் புகைப்படங்களை சேகரித்தனர். அவற்றில், பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கும் படங்களை அடையாளம் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி தந்தனர்.

இதற்கு பின், அந்த மென்பொருளே துல்லியமாக கடலின் மேற்பரப்பு படங்களை பார்த்து அலசி, குப்பை மிதக்கும் பகுதிகளைக் கண்டறிந்து சொல்ல துவங்கியது. இத்தொழில்நுட்பம், கடலை சுத்திகரிக்க, நேரடியாக படகில் கிளம்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Editor's Choice

ஒரு வாகனத்தின் ஃபாஸ்டாக் கணக்கு ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால், டிரைவர் அதை சுங்கச்சாவடியில் ரீசார்ஜ் செய்ய முடியும். மூன்று நிமிடங்களில் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகிறது.

உங்களிடம் வாகனம் மற்றும் ஏர்டெல் எண் இருந்தால், சுலபமாக ரீசார்ஜ் செய்து விடலாம்.  ஃபாஸ்டேக் வாங்கும்போது ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் வழங்குகிறது. ஏர்டெல்லின் பெரும்பாலான திட்டங்களுடன், ஃபாஸ்டேக் கொள்முதல் ரூ .100 கேஷ்பேக்கை வழங்குகிறது, மேலும் ஃபாஸ்டேக் டெலிவரி வீட்டிலும் செய்யப்படுகிறது.

ஏர்டெல்லின் இந்த சலுகையை Airtel Thanks App மூலம் பெறலாம்.

உங்கள் ஏர்டெல் மொபைல் எண்ணுடன் பயன்பாட்டில் உள்நுழைக.

பயன்பாட்டின் முகப்பு பக்கத்தில் Discover Airtel Thanks பேனரைக் கிளிக் செய்க.

இதற்குப் பிறகு, ஒரு பக்கம் உங்கள் முன் திறக்கப்படும், அதில் Get Rs 100 Cashback on FASTag என்று கொண்டிருக்கும், அதற்குக் கீழே Claim Now இருக்கும்.

அதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் FASTag வாங்க வேண்டும், அதில் நீங்கள் 100 ரூபாய் கேஷ்பேக் பெறுவீர்கள். இந்த கேஷ்பேக் உங்கள் ஏர்டெல் கட்டண வங்கி அல்லது பணப்பையில் வரும்.

 

Editor's Choice

''சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஜம்மு - காஷ்மீரை, யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இது வெறும் துவக்கம் தான். வரும் காலங்களில், சென்னை, ஐதராபாத், மும்பை, ஆமதாபாத், பெங்களூரு போன்ற நகரங்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம், மத்திய அரசுக்கு உள்ளது என, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்.பி.,யுமான, அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மத்திய உள்துறை இணை அமைச்சரும், செகந்திராபாதைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி.,யுமான கிஷன் ரெட்டி, கூறியதாவது: மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., ஆகிய கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக, பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறி வருகின்றன. லோக்சபாவில் ஓவைசி கூறிய குற்றச்சாட்டுக்கு, மத்திய அரசு பதில் அளிப்பதற்கு முன்னதாகவே, அவர் சபையை விட்டு வெளியேறினார். ஐதராபாத், சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. இந்த நகரங்களை, யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை என அவர் கூறினார்.

பக்கம் 35 / 74