இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ள 27-தேவஸ்தானங்களுள் ஒன்று!! தற்போது இத்திருக்கோயில் இவ்வாதீனத்தில் அருட்செங்கோலோச்சுகின்ற தருமையாதீனம் #27_வது_ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம்
Dharumai Adheenam பரிபாலனத்தின் கீழ் இருந்து வருகிறது.
சீர்காழி (திருப்பிரமபுரம்)
பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்
பெரியநாயகி, திருநிலை நாயகி,
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார்.
மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்.
(சம்பந்தர் தேவாரம்=முதல் திருமுறை)
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பொழிப்புரை:
""""""""""""""""""""""""""""
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
அமைவிடம்:
"""""""""""""""""""""""""
ஊர்: சீர்காழி
மாவட்டம்: மயிலாடுதுறை
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில்_தகவல்கள்:
""""""""""""""""""""""""""""""""""""""""""
தல விருட்சம்: மூங்கில்,பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
உற்சவர்: சோமாஸ்கந்தர்
ஆகமம்: பஞ்சரத்திர ஆகமம்
பழமை; 1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்கள்: சோழர்கள்
பொது_தகவல்:
""""""""""""""""""""""""""""""""
இத்திருக்கோவிலின் உள்ளேயே, சம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் வெளியே தனியே உள்ளனர்.
சுவாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இதனை சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுவார்கள்.
இத்தலத்தில் மொத்தம் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்ம தீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி முதலியன முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.
இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சியளித்ததால், மூங்கில் தலவிருட்சமாக உள்ளது.
தலத்தின்_வேறு_பெயர்கள்:
""""""""""'""""""""""""""''"""""""""""""""""""""""""""""
இத்தலத்திற்கு மொத்தம் 12 பெயர்கள் உள்ளன:
1) பிரமபுரம்-பிரம்மதேவன் வழிபட்டதால் இப்பெயர்.
2) வேணுபுரம்-இறைவன் மூங்கில் வடிவில் இந்திரனுக்கு காட்சி அளித்ததால் இப்பெயர்.
3) புகலி-சூரனுக்குப் பயந்த தேவர்கள்களின் புகலிடமாய் இருந்ததால் இப்பெயர்.
4) வெங்குரு-குரு வழிபட்டதால் இப்பெயர்.
5) தோணிபுரம்-பிரளய காலத்தில் இத்தலம் தோணியாய் மிதந்ததால் இப்பெயர்(பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சி தந்ததாலும் இப்பெயர்)
6) பூந்தராய்-பூமியைப் பிளந்து சென்ற திருமால் (வராகமூர்த்தி) வழிபட்டதால் இப்பெயர்.
7) சிரபுரம்-சிரசின் கூறாய் உள்ள ராகு கிரகம் இறைவனை பூஜித்ததால் இப்பெயர்.
8) புறவம்-புறா வடிவத்தில் வந்த அக்னியால் சிபிச்சக்கரவர்த்தி பேறு பெற்றது.
9) சண்பை-சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீர கண்ணபிரான் (திருமால்) வழிபட்டது.
10) சீகாளி-காளிதேவி சிதம்பரத்தில் நடராஜப் பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க இங்கு வந்து வழிபட்டதால் இப்பெயர்.
11) கொச்சைவயம்-மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்க பராசர முனிவர் வழிபட்டதால் இப்பெயர்.
12) கழுமலம்-மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டதால் இப்பெயர்.
தல வரலாறு:
""""""""""""""""""""""""""""
சமயக் குரவர்களில் ஒருவரான #சம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவரை முருகனின் அம்சம் என்றும் #இளைய_பிள்ளையார் என்றும் வழங்குவர்.
இவர் தனது மூன்றாவது வயதில் தந்தையுடன், இத்தலத்திலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட வந்தார். தந்தை இவரை திருக்குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு, தான் மட்டும் நீராடச் சென்றார்.
அப்போது சம்பந்தருக்கு பசி ஏற்பட,"#அம்மா_அப்பா" என்று அழத் தொடங்கினார். இவரது அழுகுரல் கேட்ட சிவபெருமான், பார்வதி தேவியிடம் குழந்தைக்கு பால் கொடுக்குமாறு கூறினார்.
அதன்படி, சம்பந்தருக்கு தரிசனம் தந்து மெய்ஞானம் கலந்த பாலை ஊட்டினாள் பார்வதி தேவி, பசி தீர்ந்த சம்பந்தர் வாயில் பால் வழிய அமர்ந்து விட்டார்.
குடித்துவிட்டு வந்த தந்தையார்,"பால் கொடுத்தது யார்? யாராவது ஏதாவது கொடுத்தால் வாங்கிச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா? அபச்சாரம் செய்து விட்டாயே" எனச்சொல்லி குச்சியால் சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார்.
அப்போது சம்பந்தர், இறைவனும் இறைவியும் தரிசனம் தந்த திசையை காட்டி #தோடுடைய_செவியன் என்ற பதிகம் பாடினார், அவரது தந்தை அதைக் கேட்டு அசந்து போனார். தன் குழந்தைக்கு இறைவியை காட்சி தந்து பாலூட்டியதை அறிந்து பரவசப்பட்டார்.
இத்தலத்தைப் பற்றிய சம்பந்தர் 67 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும், சுந்தரர் 1 பதிகமும் பாடி உள்ளார்கள்.
திருவிழாக்கள்:
"""""""""""""""""""""""""""""""""
சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்சவம் தொடங்கும். இதில் 2-ம் நாள் சம்பந்தருக்கு அம்பாள் பால் தந்த உற்சவம் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் #திருமுலைப்பால்_விழாவாக, தருமை ஆதீன குருமகாசந்நிதானம் திருமுன்னர் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு, நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
மலைக் கோயிலில் அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரருக்கு, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதப்பிறப்புகளிலும் திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் சிவராத்திரி நாட்களில் #தைலாபிஷேகம் நடைபெறும்.
ஆடிப்பூரம், நவராத்திரி, தை அமாவாசை, வைகாசி மூலம், ஆனி ரோகிணி, ஐப்பசி சதயம் ஆகிய நாட்களிலும் இவருக்கு சிறப்பு பூஜை உண்டு.
A. Gurumoorthi, Kallakurichi