Editor's Choice

மனிதற்குள்ளேயும் மிருகம் உண்டு! மிருகத்துக்குள்ளேயும் மனித நேயம் உண்டு!. வேப்பூவிலும் தேனுண்டு, ஆனால் அதை யாரும் கவனிப்பது இல்லை. அதே போல சனிபகவான் நல்லவர். நல்லதை தருபவர், கஷ்டத்திற்கு பின்!. எதுவுமே சுலபமாக கிடைத்தால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. கஷ்டப்பட்டு, பிரயத்தனப்பட்டு, முட்டி மோதி கிடைத்த பொருளை, வீணாக்க, தவறவிட ஏன்! செலவு செய்யவும் மனம் வராது. செல்வம் என்பது, நம்மிடம் இருந்து செல்வது ஆகும்!. சம்பத் என்பது நிலைத்து இருப்பது உன்பது பொருள். நிலையானதை தருவார் சனிபகவான்.

பனிரெண்டு ராசி, லக்னத்திற்கும் சனிபகவான் என்ன என்ன, பாவாதிபதி என்று பார்ப்போம். 1) மேஷம் ஜீவன& லாபாதிபதியாக வந்தாலும், சரராவிக்கு சனிபகவான் பாதகஸ்தானாதிபதியாக வருவதால் நல்லதை முழுமையாக தர இயலாது. 2) ரிஷபம் பாக்கிய& ஜீவனாதிபதியாக சனிபனவான் வருகிறார். சனிபகவான் பாதகாதிபதியாக வருகிறார். இங்கேயும் அதே கதைத்தான். 3) மிதுனம் அஷ்டம&பாக்கியாதிபதி இருக்கிறார். எட்டாமிடம் இயற்கையாகவே நல்லதை தராது. முதலில் துயரம் முடிவில் உயரம் என்றாலும், துயரம் துயரம் தானே! 4) கடகம் களத்திர& அஷ்டமாதிபதியாக வருகிறார். இங்கேயும் எட்டாமிடம், குனிய குனிய குட்டும்! 5) சிம்மம் சத்ரு& களத்திராதிபதியாக இருக்கிறார். மாரகாதிபதியாக வருவதால் எதிரியை போல தொல்லை தருவார். 6) கன்னி புத்ர& சத்ருபாவாதிபதியாக வருகிறார். தடை தாமதத்திற்கு காரணம் ஆகிறார்.

7) துலாம் சுக&பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியாக வருகிறார். பூர்வபுண்ணிய பாவத்தை கொடுத்து, சுகத்தை தடுப்பார். 8) விருச்சிகம் சகோதர& வாகனாதிபதியாக இருக்கிறார். ஆர்வமே கோளாராக இருக்கும். வெற்றிக்கு தாமதம் செய்வார். 9) தனுசு குடும்ப& தைர்யாதிபதியாக இருக்கிறார். பேச்சு மட்டுமே இருக்கும், அல்லது பேச்சால் காரியம் தடையாகும். 10) மகரம் ஜென்ம தனாதிபதியாக வருகிறார். 11) கும்பம் ஜென்ம விரயாதிபதியாக இருக்கிறார். வமம்பை விலைக்கு வாங்குவது என்பார்களே, அது நடக்கும். தன் விரலே தன் கண்ணை தாக்கும். அவர்கள் வருத்தத்திற்கு, அவர்களே காரணமாக இருப்பார்கள். 12) மீனம் லாப& விரயாதிபதி சனிபகவான். முதலில் லாபம், பிறகு விரயம்! ஆசையை காட்டி மோசம் செய்யும் அமைப்பு.

ஆக பனிரெண்டு ராசிக்குமே, சல்லதை குறைவாகவும், எதிர்மறை பலனை முறையாக, சரியாகவும் தரும் ஸ்தானம் பெற்று விடுகிறார்! இது அவர் குற்றம் இல்லை. அப்படியே நியமித்துவிட்டு பிறகு ஏன், சனிபகவனை குறை கூறவேண்டும். இன்னும் ஒன்று, சனிபகவான் கர்மகிரஹம் ஆவார். அதாவது நாம் செய்த பாப புண்ணியத்திற்கு ஏற்ப பலன் தருவார். அவர் இஷ்டத்திற்கு, நமக்கு கஷ்டம் தருவது இவர் நோக்கம் அல்ல!

வினை ம¨ன்று வகைப்படும்& முன்ஜென்மத்தில் செய்தவினை, இதற்கு பிராரப்த கர்மா என்று பெயர். சஞ்சித கர்மா& செய்து கொண்டுள்ள வினை. ஆகாம்ய கர்மா& செய்ய போகிற வினை. வினை என்றார் நல்லதும் அடக்கம். தீயதும் அடக்கம். இதை தருவது தான், சனிபகவானின் தலையாய கடமை, கட்டளை!

நேர்மையான ஆசாமியை நீதிபதியாக நியமித்து விட்டு, தப்புக்கு தண்டனை தருகிறார் என்றால், அது யார் குற்றம்!. அம்பு நோகக்கூடாது, எய்தவரை பார்க்க வேண்டும். அம்பு சனிபகவான், எய்தது நம் வினை!

வேறெந்த பிறவிலும் கிடைக்காத பெறும் பாக்கியம் மனித பிறவிக்கு உண்டு. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றார், கூழு க்கு பாடிய ஔவையார். நம் அனைத்து வினைகளையும் அதாவது, பழவினை, தொல்வினை, தொடரும் வினை, வல்வினையை போக்க இந்த மானிட பிறவியில் மட்டுமே சாத்தியம். கஷ்டத்தை ஏற்று முழுமையாக அனுபவித்து விட்டால், திரும்பவும் வராது, தொடராது. இல்லையேல் எத்தனை பிறவி எடுத்தாலும் வினை, தொடரும். இரட்டிப்பாக மாறும். ஒருவர் பத்தாண்டு சிறை தண்டனை என்றால், ஐந்தாண்டிலேயே தப்பித்தால் மேலும் பத்தாண்டு அதிகமாகும். அதே பத்தாண்டில் ஒழுக்கமாக இருந்து வருந்தி, திருந்தினால் ஆறாவது ஆண்டிலே கூட விடுதலை பெறலாம். அந்த ஒழுக்கம் தான் பூஜை புனஸ்காரம், பரிகாரம்& ஜப ஹோமமாகும். இதற்கு தான், நீதிபதி, நீதி தவறாதபதி, நிதிக்கு அப்பார்ப்பட்டவர், நியதி நியமமாக நியமிக்கபட்டவர் சனிபகவான் ஆவார்.

அவர் முதலில்& வில்லன். முடிவில்& ஹீரோ. கேரட்டர்& குணச்சித்திரம், என்னபலன் தருவார் என்பது காலமும், சூழ்நிலையும் தான் முடிவு செய்யும். மொத்தத்தில் உத்தம வில்லன், வில்லங்கமான உத்தமன்!

- அ. குருமூர்த்தி சிவம், Cell : 80123 46795

Editor's Choice

இன்று #ஆடி மாதம் #திருவாதிரை திருநாள். ஈசனுக்குகந்த இந்நன்னாளிலே தான் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழருக்கும், வானவன் மாதேவி எனும் திரிபுவனமாதேவிக்கும் தமிழகத்தில் மட்டுமல்லாது பாரத தேசம் ஒட்டு மொத்தத்திற்கும் ஒப்பற்ற சிறந்த பேரரசனாக விளங்கிய மதுராந்தக தேவர் எனும் நாமகரணம் சூட்டப்பெற்ற ராஜேந்திர சோழர் பிறந்தார். நீண்ட நாட்களாக மார்கழி திருவாதிரை எனக் கருதி வந்த கூற்றை உறுதியான ஆதாரமான #திருவாரூர் கல்வெட்டைக் கொண்டு அவர் பிறந்தது ஆடிமாத திருவாதிரை தான் என நிறுவிய வரலாற்றாய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி கூறுதல் இத்தருணத்தில் சரியானதாக இருக்கும். இத்தகைய சிறப்பான நாளிலே ராஜேந்திர சோழர் பெற்ற எண்ணற்ற போர் வெற்றிகளை சுருக்கமாக இங்கு காண்போம்.

ராஜேந்திர சோழரின் போர் வெற்றிகள்
..........................................................................
1012ம் ஆண்டு இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட ராஜேந்திர சோழரது இரண்டாம் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கிடைத்தாலும் 'திருமன்னி வளர' எனத் தொடங்கும் அவரது மெய்க்கீர்த்தியுடைய கல்வெட்டுகள்அவரது ஐந்தாம் ஆண்டு முதல் தான் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவரது போர் வெற்றிகள் அந்த ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் தொடக்கம் பெற்று தொடர்ச்சியான போர் வெற்றிகளால் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். ஆனி அக்கல்வெட்டுகளின் வரிசைப்படியே அவரது போர் வெற்றிகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. இடைதுறை நாடு
-----------------------------------
#இடைதுறைநாடு என்பது கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைபட்ட நாடாகும். தற்போதைய கர்னாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய இப்பகுதி அன்றைய மேலைச் சாளுக்கிய நாட்டின் பகுதியாக இருந்துள்ளது. இடைதுறை நாட்டை வென்றதையே ராஜேந்திரர் போர் வெற்றிகளில் முதலாவதாக அவரது மெய்க்கீர்த்தியில் காண்கிறோம்.

2. வனவாசி
---------------------
#வனவாசி என்பது பனவாசி எனும் பெயரில் உத்தரகன்னட மாவட்டத்தில் திகழும் ஊராகும். இதுவும் மேலை சாளுக்கியர் ஆளுகைக்குட்பட்ட நாடாக இருந்திருக்க வேண்டும். வனவாசி பன்னீராயிரம் எனக்குறிப்பிப்படும் இப்பகுதியே ராஜேந்திரரின் இரண்டாவது வெற்றியாக குறிப்பிடப்படுகிறது.

3. கொள்ளிப்பாக்கை
-------------------------------------
கடும் மதில் அரண்களை பெற்றிருந்ததைக் குறிக்கும் வகையில் 'சுள்ளி சூழ்மதில் கொள்ளிப்பாக்கை' எனக் குறிப்பிடப்படும் பெரிய நகரம் மேலை சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமேஸ்வரன் காலத்தில் சாளுக்கியரின் தலைநகரமாக இருந்த பகுதியாகும். ராஜேந்திரரின் மூன்றாவது பெரும் போர் வெற்றி #கொள்ளிப்பாக்கை வெற்றியாகும்.

4. மண்ணைக்கடக்கம்
-------------------------------------
இராஷ்டிரக்கூடர்களின் தலைநகரமாக இருந்திட்ட #மானியகேடம் எனும் நகரே #மண்ணைக்கடக்கம் என்பதாகும். தற்சமயம் மால்கெட் என அழைக்கப்படும் இவ்வூர் கர்னாடக மாநிலம் குல்பர்க்கா மாவட்டம் காகினா ஆற்றங்கரையில் திகழ்வதாகும்.

5. இலங்கை
---------------------
ராஜராஜர் காலத்திலேயே பாதிக்கும் மேற்பட்ட இலங்கை பகுதிகள் சோழர் வசம் வந்தாலும் மலைகள் சூழ்ந்த ரோகண நாட்டுப் பகுதிகள் கைப்பற்ற முடியாமல் இருந்தது. அந்தக் குறையும் ராஜேந்திரர் காலத்தில் தீர்க்கப்பட்டு #இலங்கை முழுதும் சோழர் ஆட்சிக்குட்பட்டது.

இலங்கை வெற்றியில் சிறப்பாகப் போற்றப்பட வேண்டிய மற்றொரு விஷயம் பராந்தகர் காலம் முதலே முயன்றும் முடியாமலிருந்த ஒரு விஷயம் ராஜேந்திரர் காலத்தில் வெற்றிக்கரமாக முடிவுக்கு வந்தது. சோழர்களுக்கு அஞ்சி ராஜசிம்ம பாண்டியன் என்பவனால் இலங்கை மன்னன் நான்காம் தப்புலனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த புராதனமான பாண்டியர்களின் #சுந்தரமுடியும் #இந்திரன்ஆரமும் ராஜேந்திரரால் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டது. ராஜேந்திரரின் ஐந்தாவது ஆட்சியாண்டிலேயே இப்பெருமைமிகு வெற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6. கேரள மற்றும் பழந்தீவு வெற்றிகள்
--------------------------------------------------------------
கேரள பகுதியை ஆட்சிப்புரிந்து வந்த சேரர்களை வென்று ராஜேந்திரர் அவர்களது பெருமைமிகு சின்னங்களான மணிமுடியையும், சிவப்பு ரத்தினக் கற்கள் பதிக்கப்பபுப்ப மாலையையும் பெற்றார். அத்துடன் மிகுந்த பாதுகாப்புடையதாகக் கருதப்படும் பழந்தீவு பகுதிகள் சோழர் வசமாயிற்று. குமரிக்கு தென்திசையில் அமைந்துள்ள மாலத்தீவுகளே #பழந்தீவு என அழைக்கப்படுவதாக ஆய்வாளர் கருதுகின்றனர்.

7. சாந்திமத்தீவு
---------------------------
ராஜேந்திரரின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் மற்றுமொரு பகுதி சாந்திமத்தீவு ஆகும். வலிமையான கடற்படையை கொண்டிருந்த ராஜேந்திரர் ' அலைகடல் மீது பலகலம் செலுத்தி' சேரர் வசமிருந்த #சாந்திமத்தீவினை வென்று பரசுராமரது அரசமுடியென்று காலங்காலமாக சேரர்களால் பாதுகாக்கப்பட்ட புராதனமான பொன்முடியை வெற்றிச்சின்னமாக கைப்பற்றினார் ரராஜேந்திர சோழர். தற்சமயம் அரபிக்கடல் பகுதியில் உள்ள இலட்சத்தீவுகளே சாந்திமத்தீவு பகுதிகள் என ஆய்வாளர் கருதுகின்றனர்.

8. இரட்டபாடி ஏழரையிலக்கமும்
-----------------------------------------------------
மேலை சாளுக்கிய மன்னன் சயசிங்கன் என்பவனை வென்று #இரட்டபாடிஏழரையிலக்கம் எனும் பகுதியையும் பெரும் செல்வத்தையும் கைப்பற்றினர் சோழர்கள்.இப்பெரும்போர் நடந்த முசங்கி எனும் இடம் கர்னாடக மாநிலம் தாவன்கிரி மாவட்டம் ஹர்பனஹல்லி வட்டத்திலுள்ள #உச்சங்கிதுருக்கம் எனும் பகுதி என்பது ஆய்வாளர் கருத்தாகும்.

ராஜேந்திரரின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் பெற்ற இவ்வெற்றிக்குப் பின் அவர் தஞ்சைக்கு திரும்புவதை திருவாலங்காடு செப்பேடு விளக்குகிறது. ராஜேந்திரரின் பதினொராவது ஆட்சியாண்டு வரை இவ்வெற்றிகளே குறிக்கப்படுகின்றன. வென்ற பகுதிகளை ஸ்திரப்படுத்திவிட்டு அதே வேகத்துடன் மேலும் படைகளை பெருக்கி முழு வலிமையுடன் தன்னுடைய பதினொராவது ஆட்சியாண்டில் வடபுல படையெடுப்புகளை தொடங்குகிறார் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழர். வடபுல படையெடுப்பில் முன்னிலை வகிப்பது ராஜேந்திரரின் வீரப்புதல்வர்களும் அனுபவம் வாய்ந்த ராஜராஜ மாராயன் போன்ற தளபதிகளுமே.

தன் தோள்வலிமையால் கங்கை நீரை தன் நாட்டுக்கு கொண்டு வரும் எண்ணமே வடபுல படையெடுப்புக்கு முக்கிய காரணமென்று திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. வடபுல போர்களில் பெற்ற பெரும் வெற்றிகளை இனி காண்போம்.

9. சக்கரக்கோட்டம்
--------------------------------
#சக்கரக்கோட்டம் எனும் ஊர் தற்போதைய சட்டீஸ்கார் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள சித்திர கூடம் (Chitra kutt) எனும் நகரே என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.அந்நாட்டிலிருந்தோரை விக்கிரம வீரர் என ராஜேந்திரர் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அவர்களை சோழப்படைகள் வெற்றிக் கொள்கின்றன.

10. மதுரை மண்டலம்
-------------------------------------
பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா எனும் பகுதியாகவோ ஜார்கண்ட் மாநில பகுதியாகவோ #மதுரைமண்டலம் இருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின்றனர்.

11. நாமனைக்கோனை
----------------------------------------
'காமிடை வளை நாமனைக் கோனை' என மெய்க்கீர்த்தி கூறும் #நாமனைக்கோனை சட்டீஸ்கர் அல்லது ஜார்கண்ட் மாநிலத்துக்குட்பட்ட பகுதியாக தற்போது இருக்கலாம்.

12. பஞ்சப்பள்ளி
----------------------------
'வெஞ்சின வீரர் பஞ்சப்பள்ளி' என பகை வீரர்களின் வீரத்தையும் பெருமையுடன் குறிப்பிடப்படும் தற்போது ஜகத்சிங்காபூர் என அழைக்கப்படுகிறது.

13. மாசுனி தேசம்
--------------------------------
நாகர் மரபினர் ஆண்ட #மாசுணிதேசம் தற்போதைய சட்டீஸ்காரர் மாநில பகுதியாகும்.

14. ஆதிநகர்
------------------------
இந்திரரதன் எனும் மன்னனை பெரும்போருக்குப் பின் வென்ற சோழப்படைகள் #ஆதிநகரில் வெற்றிக் கொடி நாட்டியது. தற்போதைய ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதியாக இருக்கலாமென கருதப்படுகிறது.

15. ஒட்டவிஷயம்
--------------------------------
அணுக இயலாத காவலையுடைய #ஒட்டவிஷயம் எனும் நாட்டை வென்றது அடுத்த வெற்றியாக ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியில் குறிக்கப்படுகிறது. இது தற்போதைய ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குக் பகுதியாகும்.

16. கோசலைநாடு
--------------------------------
'பூசுரர் சேர்நல் கோசலை நாடு' அதாவது பிராமணர் மிகுந்த #கோசலை நாட்டைக் கைப்பற்றியது அடுத்த வெற்றியாகும். தற்போதைய ஒடிசாவின் கிழக்கு மற்றும் ஜார்கண்ட் பகுதிகளை உள்ளடக்கிய நாடாகும்.

17. தண்டபுத்தி
----------------------------
மகாநதிக்கு கிழக்காகவும், பாகீரதி(ஹூக்ளி) நதிக்கு மேற்காகவும், வங்கக் கடலுக்கு வடக்காகவும் திகழ்ந்த நாடே #தண்டபுத்தி ஆகும். தர்மபாலன் எனும்அரசனை வென்று தண்டபுத்தியை ஆட்கொண்டது சோழப்பெரும்படைகள்.

18. தக்கணலாடம்
-------------------------------
அடுத்ததாக 'திக்கணைகீர்த்தி தக்கணலாடம்' எனக் குறிப்பிடப்படும் #தக்கணலாடம் நாட்டின் அரசன் இரணசூரன் என்பவனை வென்றன ராஜேந்திரரின் வீரப்படைகள்.

19. வங்காள தேசம்
---------------------------------
வடபுல படையெடுப்புகளிலே மிகக்கடுமையான போராகக் கடினமான வெற்றியாகக் கருதப்படுவது வங்காள தேசத்தின் மாமன்னர் மகிபாலனை வெற்றிக் கொண்டதேயாகும். கோவிந்தசந்தன் என்று குறிப்பிடுப்படும் மகிபாலனை வென்று #வங்காளதேசத்தை ராஜேந்திர சோழருக்குக் கீழ் பணிய வைத்தன மாபெரும் சோழப்படைகள். பெரும் செல்வங்களையும், யானைகளையும், குதிரைகளையும், வெற்றிச் சின்னங்களாக பாலர் மரபு சிலைகளையும் கைகக்கொண்டனர் சோழர்கள்.

20. உத்திரலாடம்
--------------------------------
வங்கதேசத்தை வென்ற பின்பு கங்கை நீரை எடுப்பதற்காக இறுதியாகக் கைப்பற்றிய நாடு தான் #உத்திரலாடம் ஆகும்.

21. ஒட்டரதேசம்
------------------------------
சோழப்படைகள் கங்கை நீரை எடுக்கும் அதே சமயத்தில் புண்ணிய நதியான கோதாவரியில் நீராடிய ராஜேந்திரர் கிழக்கு நோக்கிச் சென்று வெற்றியுடன் திரும்பும் தனது தண்டநாயகனை வரவேற்கச் சென்றார். அப்போது ஒட்டர தேசத்தின் மன்னர் தனது தம்பியுடன் வந்து சமர்புரிய அவர்களை வென்று ஒட்டர தேசத்தின் மகேந்திரகிரியில் ஜயஸ்தம்பம் நாட்டினார் ராஜேந்திர சோழர்.

அலைகடலில் பலகலம் செலுத்தி வென்ற நாடுகள்
-------------------------------------------------------------
22. கடாரம்
------------------------
#கடாரம் நாட்டின் மன்னனான சங்கிராம விஜயோத்துங்கனை வென்ற ராஜேந்திரரின் தண்டநாயகன் பெருஞ்செல்வம், பட்டத்து யானை, அரண்மனை தோரண வாயில், கலையழகுள்ள நிலைவாயில் போன்றவற்றை கைக்கொண்டான்.

23. ஸ்ரீவிஜயம்
--------------------------
தற்போதைய இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா பகுதியான #ஸ்ரீவிஜயம் அடுத்து வெல்லப்பட்ட நாடாகும்.

கடல்கடந்து சோழ.படைகள் ராஜேந்திரர் ஆணைப்படி வென்ற மற்ற நாடுகள் பின்வருமாறு.

24. பண்ணை

25. மலையூர்

26. மாயிருடிங்கம்

27. இலங்காசோகம்

28. மாபப்பாளம்

29. இலிம்பங்கம்

30. வளைப்பந்தூர்

31. தக்கோலம்

32. மாதமலிங்கம்

33. இலாமூரிதேசம்

34. மானக்காவரம்

என்ன நண்பர்களே படிக்கவே மூச்சு முட்டுதா..? அனைத்து நாடுகளையும் அனாயசமாக வெற்றிக் கொண்டு தோல்வி என்பதையே அறியாது சாதித்த ராஜேந்திர சோழர் புகழை நாம் மட்டுமல்ல உலகமே போற்ற வேண்டும். உலகின் எந்த பேரரசனுக்கும் சளைத்தவனில்லை நம் ராஜேந்திரன். உண்மையில் அனைவரை விடவும் சிறந்தவன் என்பதையுணர்ந்து அவர் புகழ் அனைவரும் அறிய பரப்புவோம்...

இனியபிறந்தநாள்நல்வாழ்த்துகள் மாமன்னர் ராஜேந்திர சோழரே!
உங்கள் புகழ் உலகம் உள்ள வரை நீடித்திருக்கும்.

 

Editor's Choice

தஞ்சை பெருவுடையாய் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை அமைத்த மாபெரும் தமிழ் மன்னன் முதலாம் இராஜ ராஜ சோழனின் மகன் முதலாம் இராசேந்திர சோழனால், அரியலூர் மாவட்டத்தில் கங்கைக் கொண்ட சோழபுரம் எனும் ஊரில் கட்டப்பட்ட சிவன் கோயில்

வடக்கே கங்கை நதிவரை படையெடுத்துச் சென்று வங்க மன்னன் மகிபாலன் ஆண்ட பால பேரரசை வென்று திரும்பியதன் நினைவாக இவ்வூரையும், இங்கொரு கோயிலையும் எழுப்பினான் இராசேந்திர சோழன் என்கிறது சரித்திரம்.

கோயிலின் அழகையும், இதன் அமைப்பையும் கண்டு இக்கோயில் பெண்தன்மை நிறைந்த கோயில் என்கின்றனர் ஆய்வாளர்கள். இக்கோயில் கிபி 1035 இல் கட்டப்பட்டதாக கோயில் கல்வெட்டுக்களின் தகவலை வைத்து கூறுகின்றனர்.

தன் தந்தை இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் ஆலயத்தைப் போல் தானும் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இராசேந்திர சோழனின் மனதில் இருந்திருக்கிறது. வடதேசத்தின் மீது படையெடுத்து (விஜயாதித்தன்)சாளுக்கியர்களை வென்று வங்க தேசத்து மன்னன் மகிபாலனை வெற்றிக் கொண்டு திரும்பிய பின்,

தன் வெற்றியின் நினைவாக ஒரு ஊரையும். தான் ஆசைப்பட்டபடி அங்கே சிவனுக்கு ஒரு கோயிலையும் கட்டினான். காவிரி ஆற்று நீர் இவ்வூருக்கு வர வேண்டும் என்பதற்காக காவிரிலியிலிருந்து வாய்க்கால் கொண்டு வந்து ஒரு ஏரியையும் அமைத்தான், அதற்குச் சோழகங்கம் என்று பெயர் சூட்டினான்.

இந்த ஏரி தற்போது பொன்னேரி என்றழைக்கப்படுகிறது

தான் வடநாட்டில் வென்ற நாடுகளின் அரசர்களில் தலையில் கங்கை நீரை கொண்டுவரச் செய்து, இந்த எரியில் ஊற்றச் செய்து, அந்நீரில் பிரகதீசுவரரின் ஆலயத்தின் குடமுழுக்கைச் செய்ததாக திருவேலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

மூவர் உலா, தக்கையாப் பரணி போன்ற நூல்களில் கங்கைக் கொண்ட சோழபுரம் பற்றிய விரிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.

கங்கைக் கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபின் இராசேந்திர சோழன் சோழநாட்டின் தலைநகராக அதை அறிவித்தான்.. அதன் பிறகு கங்கைக் கொண்ட சோழபுரம் சுமார் 250 ஆண்டுகள் சோழர்களின் தலைநகராக இருந்து வந்தது. ரா«ச்ந்திரனுக்குப் பின்னர் வந்த மன்னர்களும் இந்நகரிலேயே முடிசூட்டிக¢கொண்டு ஆட்சி செய்தனர்.

இந்நகரம் கோட்டைச் சுவர்களுடன் கட்டப்பட்டு, அரண்மனைகள் மற்றும் நடுவில் கோயில் எனத் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை 16 கி.மீ பரப்பில் கட்டப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இராசேந்திரனுக்குப் பின் அரசாண்ட முதலாம் குலோதுங்க சோழன் நகரைச்சுற்றி கோட்டைச் சுவரை அமைத்திருககிறான்.

13 நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியப்படையெடுப்பால் இந்நகரம் அழிக்கப்பட்டது. கோயிலை மட்டும் அழிக்காமல் விட்டு வைத்திருக்கின்றனர்.

கோயில் அமைப்பு

இககாயில் சோழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பினை பறைசாற்றுகிறது. இராசேந்திரனின் விருப்பத்திற்கிணங்கி தஞ்சைப் பிரகதீசுவரர் ஆலயத்தைக் கட்டிய சிற்பிகளே இக்கோயிலையும் கட்டியுள்ளார்கள்.

170 மீட்டர் நீளமும், 98 மீட்டர் அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய மேடையை அமைத்து அதன் மேல் இக்கோயிலைக் கட்டியுள்ளனர்.

நடுக்கருவறையில் கோயிலின் மூலவரான பிரகதீசுவரர் லிங்க வடிவில் அமைந்துள்ளார். லிங்கத்தின் உயரம் 13 அடி. அடிப்பகுதி சுற்றளவு 59 அடி சுற்றளவு. கருவறைக்கு முன் அர்த்தமண்டபமும், முன¢மண்டபமும் அமைந்துள்ளன. கருவறை வாயில் இருபுறமும் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் உள்ளனர்.

கருவறைக்குள் சூரிய ஒளியை எதிரொளிக்குமாறு கருவறையை நோக்கியபடி நந்தி சிலை( 660 அடி) அமைக்கப்ப்டடுள்ளது. கருவறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் விதத்தில் சந்திரக்காந்தக் கல் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுள் தெற்குநோக்கிய சந்நிதியில் பெரியநாயகி அம்மன் 9.5 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார். பிரகதீசுவரர் கருவறையைச் சுற்றி 5 கருவறைகளும் வெளிபுறமகா சிம்மக் கிணறும் அமைந்துள்ளன.

இக்கோயில் தொல்லியல் துறையினரால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறத. யுனெஸ்கோ அமைப்பு, இககாயில், தஞ்சை பெரிய கோயில் மற்றும் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் யுனெஸ்கோ அமைப்பினனால் பொது ஊழி உலகப் பாரம்பரியக் களப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

கோயிலின் வெளிப்புற மாடங்களில் சோழர்கால சிற்பக்கலையை பறைசாற்றும் வகையில் சுமார் 50க்கும் மேறப்ட்ட சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் பிற சிவன் கோயில்களைப் போலவே தினசரி நான்குமுறை வழிபாடுகள் சைவ ஆகமமுறைப்படி நடைபெறுகின்றன. மேலும் மகாசிவாரத்திரி, ஐப்பசி பௌர்ணமி, மார்கழி திருவிழா போன்ற சிறப்பு நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

 

Editor's Choice

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

ஏன் கோவிலை கட்டினார்கள்?

*தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ?

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ?

*உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதையேதான் தமிழக கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.
வாழிய பைந்தமிழ் நாடு

Editor's Choice

மற்ற மாவட்டங்களில் இருப்பதை விட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் சுடலைமாட சாமி வழிபாடு அதிக அளவில் உள்ளது. சுடலைமாட சாமி மீது பயம் கலந்த பக்தி இப்பகுதி மக்களுக்கு அதிகம். தவறாக நடந்து கொண்டால் சுடலை மாடசாமி தண்டிப்பார் என இப்பகுதி மக்களிடையே நம்பிக்கை அதிகம் உண்டு. பார்ப்பதற்க்கு பயப்படும் தோற்றத்தில் இருப்பதால், சுடலை மாடசாமி கதைகளை சொல்லி சிறு குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பவர்கள் கிராமப்பகுதிகளில் அதிகம்.

சுடலை மாடனுக்கு உள்ள பல்வேறு பெயர்கள் இசக்கி மடன், இருளப்பசாமி, பூல் மாடன், சுடலை மாடன் சாமீ, சுடலை ஈஸ்வரன், மாடசாமி, மாடன், மகாராஜா, சுடலேஷ்வரன், சுடலையாண்டி, சுடலை முத்து, மாசான முத்து, முண்டன் சாமி, மயாண்டீஸ்வரர், மாண்டி, பலவேசகரன் சுவாமி, ஊசிக்காட்டு சுடலை, முத்து சுவாமி, பத்மா பரம ஈஸ்வரன், வெள்ளை பாண்டி, ,தளவாய் மாடசாமி இரட்டைசுடலை மாடசாமி, பண்றி மாடன், பூக்குழி மாடன், சங்கிலி மாடன், ஆகாச மாடன் ,உதிர மாடன், என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்ததால் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு அலைய துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது. அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதால் அதை இனியும் தேவலோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார் என்பது வரலாறு.

சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடைய பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். விளக்கு எரிந்து திரி எரிந்துபோய் மங்கத் துவங்கியதும் சிவபெருமான் வேண்டும் என்றே அதன் திரியை பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு நாள் அது பார்வதியின் தொடையில் விழுந்து விட அவள் சதை தீ காயத்தினால் வீங்கி விட்டது. ஆகவே சிவபெருமான் பிரம்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது. அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி, அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.

சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிக்களரி என்ற வருடாந்திர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு. அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை சுடலை மாட சாமி வேட்டைக்குப் போகுதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள். அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள்.

அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம். அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார். அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார். தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள். ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சுடலை மாடசாமி கோயில்களில் அசைவ உணவு வகைகள் படைக்கப்படுவதால் புரோகிதர்கள் மூலம் பூசைகள் செய்யப்படுவதில்லை. ஒரு சில கோயில்களில் மட்டும் ஓதுவார்கள் பூசைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இந்தப் மிருகங்களைப் பலியிடும் நடைமுறைகளில் கலந்து கொள்வது இல்லை. ஆனால் இக்கோயில்களில் அதிகமாக அந்தக் கோயில் வைத்திருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசைப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

சுடலை மாடசாமி கோயில்களுக்கு பெரும்பாலும் கூரை வேயப்படுவதில்லை. அப்படியே கூரை வேயப்பட்டிருந்தாலும் அவை எளிமையாகவே இருக்கிறது. சுடலை மாடன் அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் பெரும் பொருள் இருப்பதை மைமூலமாக அறிந்துகொண்ட காளிப்புலையன் என்னும் மலையாள மாந்திரீகன் சுடலை மாடன், அன்னையின் பணிக்கு வெளியில் சென்று இருந்தபோது கோவில் பொருளை கொள்ளை இட்டு சென்றானாம், இதை அறிந்த சுடலை காளிப்புலையணை வதைத்து குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து குடி கொண்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ்நாடு முழுக்க இன்று சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்.

சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது. தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மாவிடமாட்டான் என்பது இப்பகுதி மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு. இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி என்ற உணவு இவருக்கு உண்டு. இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம் என்பதுவும் பொதுவாக கருதப்படுகிறது.

படத்தில் சுடலை மாடனின் வீற்றிருக்கும் கோலம். பெரும்பாலும் அவரது ஆலயங்களுள் நின்ற கோலமே காட்டப்பட்டிருக்கும்.

Editor's Choice

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள்

திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்*

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்

இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பபெற்றதுக்கது.

இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

2. #சபை சிவாலயங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டில் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* சித்ர சபை - திருக்குற்றாலம்-

* தாமிர சபை- திருநெல்வேலி

*3. #முப்பீட ஸ்தலங்கள்

* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்

* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்

* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

4. #பஞ்ச ஆசன தலங்கள்

* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்

* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்

* நான்குநேரி - திருநாகேஷ்வரர்
திருக்கோயில்

* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்

* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)

* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்

* தாருகாபுரம் - நீர் தலம்

* தென்மலை- காற்று தலம்

* தேவதானம் - ஆகாய தலம்

5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்

* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்

* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்

* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்

* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்

* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

6. #இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்

* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்

7. #நவ சமுத்திர தலங்கள்

* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

8. #பஞ்ச பீட தலங்கள்

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

#கூர்ம பீடம் - பிரம்மதேசம்
#சக்ர பீடம் - குற்றாலம்
#பத்ம பீடம் - தென்காசி
#காந்தி பீடம் - திருநெல்வேலி
#குமரி பீடம் - கன்னியாகுமரி.
இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)*

* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்

#தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)

* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்

* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்

* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்

* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்

* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்

* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்

* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்

* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில்
(இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

#வாலி வழிபட்டத் தலங்கள்

*திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

* கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

* தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்

* பாபநாசம் - சூரியன்

* சேரன்மகாதேவி - சந்திரன்

* கோடகநல்லூர் - செவ்வாய்

* குன்னத்தூர் - இராகு

* முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

* தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

* சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி ஸ்தல புராணம் கூறுகிறது.

துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.

* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு

பக்கம் 10 / 11