Editor's Choice
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாயில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்தது.
 
ஒரு கிலோ 800 கிராம் எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினிட்டி  (Ingenuity) என்ற  பெயருடைய இந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.
 
பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்  தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக இது ஒத்தி வைக்கப்பட்ட. தற்போது செவ்வாய் கிரகத்தில்  இன்ஜினிட்டி ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு உள்ளது.
 
விடாமுயற்சி என பொருள்படும் பெர்சிவியரன்ஸ்" என்ற விண்கலத்தை, நாசா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
 
7 மாத கால பயணத்திற்கு பிறகு இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும். செவ்வாய் கோளின் பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் அதிநவீன கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக துளையிடும் இயந்திரம், 23 அதிநவீன கேமிராக்கள், 2 மைக்ரோபோன்கள் உள்ளிட்டவையும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு சராசரி கார் அளவில், ஆறு சக்கரில் ஓடும் `Perseverance' ரோவர் 7-அடி கொண்ட ரோபோ பாறையைத் துளைத்து, மாதிரிகளைச் சேகரிப்பதற்கான திறன் படைத்தது. செவ்வாய்க்கிரகத்தில் உள்ள மாதிரிகளைச் சேமித்து பூமிக்கு அனுப்ப இந்த ரோவரில் 43 மாதிரி குழாய்கள் உள்ளன, ஒவ்வொன்றும் பூமியிலிருக்கும் நுண்ணுயிர்களை அகற்றுவதற்காகக் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி அனுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு குழாயிலும் 15 கிராம் எடையுள்ள மாதிரிகள் வைத்திருக்க முடியும். பூமிக்குத் திரும்புவதற்குள் 0.5 கிலோ கிராம் எடையுள்ள மாதிரிகளைச் சேகரிப்பதே இதன் குறிக்கோள். 2026-ம் ஆண்டில் மீண்டும் இந்த மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டு வரும் திட்டம் தொடங்கப்படும்.
 
ஏற்கெனவே செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுவரும் 'Curiosity' ரோவரை விட அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம், சீனாவை தொடர்ந்து இந்த மாதத்தில் செவ்வாய் கோளுக்கு அனுப்பப்படும் மூன்றாவது விண்கலம் இதுவாகும்.
Editor's Choice
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 6 மாதத்துக்கு ஒரு முறை என்கிற வகையில் சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.
 
விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் அரசு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் க்ரூ டிராகன் விண்கலத்துடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்துள்ளது.
 
கடந்த ஆண்டு மே மாதம் 2 வீரர்களும், நவம்பர் மாதம் 4 வீரர்களும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சென்றனர்.
 
நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3வது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது.
 
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட் , மேகன் மெக் ஆர்தர் , நாசா காமண்டர் ஷேன் கிம்பரோ மற்றும் ஜப்பானை சேர்ந்த விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட் ஆகிய 4 பேரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்படும் பால்கன் 9 ராக்கெட்டில் பறக்கவுள்ளனர். இவர்கள் 6 மாத காலம் அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர். 
Editor's Choice

சமூக ஊடக வலைதளமான டிவிட்டர் சேவையில், இன்று காலை முதலே பயனர்கள் சிக்கல்களை சந்தித்தனர். ட்வீட்களை பதிவு செய்வதிலும், தகவல்களை பார்ப்பதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. சர்வர் பிரச்சினை காரணமாக உலகளவில் டிவிட்டர் இணையதளம் முடங்கியுள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம், ட்விட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் உள்ள சிக்கல்களை சரி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்தலாம்” என தெரிவித்தது.

டுவிட்டர் பாதிப்பு குறித்து தகவல்களுடன் வெளியிட்ப்பட்டுள்ள அறிக்கையில்,  ட்விட்டர் வலைதளத்தை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து இதுவரை 81 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காலையில் ஏற்பட்ட சிக்கல் சிறிது சரியானது. ஆனால்,  மாலையும், ட்விட்டர் முடங்கியதால், பயனர்களால் டிவிட்டரை பயன்படுத்த முடியவில்லை.

கடந்த மார்ச் மாதம், இதே போன்று ஒரு நிகழ்வாக, சமூக ஊடக வலைதள சேவைகள் முடங்கின. ஆனால், அப்போது ட்விட்டரில் பாதிப்பு எதுவும் இல்லை.

Editor's Choice

அமீரகத்தின் நிலவு பயண திட்டத்தில் திட்டமிடப்பட்ட 2 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே வருகிற 2022-ம் ஆண்டில் ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

அமீரகத்தில் நிலவு பயண திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்தார். இந்த திட்டத்தில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் நிலவில் ஆய்வு செய்ய உருவாக்கப்படும் ரோவர் வாகனத்திற்கு துபாயின் மறைந்த முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம் நினைவாக ‘ராஷித்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலவு பயண திட்டத்தில் 100 சதவீதம் அமீரகத்தில் உள்ள பொறியாளர்கள், விஞ்ஞானிகளால் ராஷித் ரோவர் மாதிரி வடிவமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தின் ராஷித் ரோவர் வாகனம் இதுவரை நிலவில் யாரும் தடம் பதிக்காத பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்படுகிறது. பொதுவாக வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படும் ரோவர் வாகனங்கள் தரையிறங்க லேண்டர் எனப்படும் விண்கலங்களின் உள்ளே வைத்து அனுப்பப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டுகளில் இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் ரோவர் வாகனத்தை வெற்றிகரமாக நிலவில் விட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டன. அதனை தொடர்ந்து அமீரகம் நிலவுக்கு ரோவர் வாகனத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்காக ஜப்பான் நாட்டின் ஐ-ஸ்பேஸ் நிறுவனத்துடன் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் உருவாகும் ‘ஹக்குட்டோ- ரெபூட்’ என்ற லேண்டர் விண்கலத்தில் வைத்து அமீரகத்தின் ‘ராஷித்’ ரோவர் வாகனம் விண்ணில் அனுப்பப்படும்.

லேண்டரில் இருந்து வெளிவரும் ராஷித் ரோவர் வாகனம் நிலவின் பல்வேறு நிலப்பரப்புகளில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. லேண்டர் விண்கலம் நிலவில் தரையிறங்கியவுடன் ‘ராஷித்’ ரோவர் வாகனம் தனியாக பிரித்து விடப்பட்டு நிலவின் பல்வேறு நிலப்பரப்புகளில் வினாடிக்கு 10 செ.மீ. என்ற வேகத்தில் ஊர்ந்து சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள நுண்ணோக்கியால் மண்ணை ஆய்வு செய்யும்.

இந்த ராஷித் ரோவர் கொண்டு செல்லப்படும் லேண்டர் தரையிறங்க மென்மையான நிலப்பரப்புகள் வேண்டும். எனவே அதற்காக நிலவின் முன் பகுதியில் வட மற்றும் தென் துருவத்தில் உள்ள 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒரு பகுதியில் ராஷித் ரோவர் தரையிறக்கப்படும்.

தற்போது அமீரக நிலவு பயணத்திட்டமானது மிக விரைவாக நடைபெற்று வருவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு 2 ஆண்டுகள் முன்னதாக ராஷித் ரோவர் வாகனம் வரும் 2022-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் வாகனம் அனுப்பும் தகவல்கள் உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு பகிரப்படும்.

Editor's Choice

ஆட்டோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்கவும், தங்கள் விற்பனையை அதிகரிக்கவும் பல உத்திகளை கையாள்கின்றன. தற்போது வெளிவரும் நவீன பைக்குகளில் சவாரி செய்வது சிறப்பானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கிறது. பல இரு சக்கர வாகன நிறுவனங்கள் தங்கள் ஸ்கூட்டர்களில் மேலும் மேலும் புதிய அம்சங்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. இவற்றில் மிக முக்கியமானது புளூடூத் இணைப்பு. இதன் மூலம், ஸ்கூட்டரை தொலைபேசியுடன் இணைத்து அதன் பல அம்சங்களை அணுக முடியும்.

New Suzuki Burgman Street அம்சங்கள் காண்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் 125cc, 4-ஸ்ட்ரோக் ஏர்-கூல்ட் எஞ்சின் உள்ளது. இது SOHC 2 வால்வு ஒற்றை சிலிண்டருடன் வருகிறது. இந்த எஞ்சின் 6750 rpm-மில் 8.7  ps பவரையும் 500 rpm-மில் 10 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதில், லிட்டருக்கு 55 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும். முன் மற்றும் பின்புறம் இரண்டிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை 81,286 முதல் 84,786 ரூபாய்கு இடையில் உள்ளது.

Suzuki Burgman Street-ல் புளூடூத் கனெக்டிவிடி உள்ளது.

இந்த பிரிமியம் ஸ்கூட்டரை சுசுகி சமீபத்தில்தான் புளூடூத் இணைப்பு வசதியுடன் அறிமுகம் செய்தது. வாகன ஓட்டுனர்கள் இதை Suzuki Ride Connect App-ன் உதவியுடன் ஸ்கூட்டருடன் இணைத்து அதன் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். ரைடர்ஸ் டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தல், செக் கால், மிஸ்டு கால், காலர் ஐ.டி ஆகியவற்றுடன் வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள், தொலைபேசி பேட்டரி அளவின் டிஸ்பிளே, அதிக வேக எச்சரிக்கை போன்ற அம்சங்களைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இந்த விஷயங்களை Android தொலைபேசிகளிலிருந்து மட்டுமே பயன்படுத்த முடியும், iOS இலிருந்து பயன்படுத்த முடியாது. 

TVS NTorq 125 புளூடூத் இணைப்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்கூட்டர் ஆகும். இது 5 அங்குல எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது லேப் டைமர், 0-60 கிமீ வேக முடுக்கம் நேர ரெக்கார்டர், டாப் ஸ்பீட் ரெக்கார்டர், என்ஜின் வெப்பநிலை அளவீடுகள், சராசரி வேக காட்டி மற்றும் சேவை நினைவூட்டல் போன்றவற்றைக் காட்டுகிறது. புளூடூத் இணைப்பு மூலம் ஓட்டுனர், தங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து தரவையும் சரிபார்க்க முடியும். இது தவிர, தொலைபேசி அதன் எல்சிடி டிஸ்ப்ளேயில் அறிவிப்பு, பயண அறிக்கை மற்றும் நேவிகேஷன் ஏரோ ஆகியவற்றையும் காட்டுகிறது.

TVS NTorq 125-ன் விலை

டி.வி.எஸ் என்டோர்க் 125 ஸ்கூட்டரில் புதிய எல்.ஈ.டி ஹெட்லைட் தவிர, ஸ்கூட்டரின் ரேஸ் பதிப்பில் தனித்துவமான வண்ணத் திட்டம் உள்ளது. இதன் பாடி பேனல்கள் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் உள்ளன. இது தவிர, என்டோர்க்கின் இந்த புதிய மாடலில் ஒளி மற்றும் ரேஸ் பதிப்பு பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. 124.8cc-யின் மூன்று வால்வு, காற்று குளிரூட்டப்பட்ட வசதி, எரிபொருள் செலுத்தப்பட்ட இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது 7,000 rpm-மில் 9.1 bhp பவரையும் 5,500 rpm-மில் 10.5 Nm டார்கையும் உருவாக்குகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ .71,095 ஆகும்.

New Suzuki Access 125 -யின் விலை

New Suzuki Access 125-ஐ நிறுவனம் மிக உயர்ந்த மைலேஜ் ஸ்கூட்டராக அறிமுகப்படுத்தியது. ஆனால் காலப்போக்கில், நிறுவனம் ஸ்கூட்டரில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாற்றம் ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்பு பொருத்தப்பட்டதாகும். புளூடூத் இணைப்புடன் கூடிய இந்த ஸ்கூட்டர், சுசுகி ரைடு கனெக்ட் ஆப் மூலம் ஓட்டுனர்களின் தொலைபேசிகளை கன்சோலுடன் இணைக்க அனுமதிக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

New Suzuki Access 125-ல் கிடைக்கிறது அதிக சலுகை

புதிய புளூடூத் கன்சோல் ஓட்டுனருக்கு டர்ன்-பை-டர்ன் வழிசெலுத்தல், அழைப்பு மற்றும் செய்தி எச்சரிக்கை, மிஸ்டு-கால் எச்சரிக்கை மற்றும் அழைப்பாளர் ஐடி, வாட்ஸ்அப் எச்சரிக்கை, வருகை எச்சரிக்கையின் மதிப்பிடப்பட்ட நேரம், வருகை எச்சரிக்கையின் மதிப்பிடப்பட்ட நேரம், அதிவேக எச்சரிக்கை மற்றும் தொலைபேசியின் பேட்டரி நிலை ஆகியவற்றை தெரியப்படுத்தும். செயலியின் மூலம் சமீபத்திய இருப்பிடம் மற்றும் பயண விவரங்களையும் பகிரலாம்.

Editor's Choice

பிரபலமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் தற்போது  சிக்கலை எதிர் கொண்டுள்ளது, இதன் தளத்தின் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு ஹேக்கர்கள் முயற்சிக்கலாம். வாட்ஸ்அப் சேவையில் உள்ள ஓட்டைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்த பாதுகாப்பு தொடர்பான ஆய்வாளர்களான லூயிஸ் மார்க்வெஸ் கார்பின்டெரோ மற்றும் எர்னஸ்டோ கேனலேஸ் பெரேனா இருவரும் முயற்சிக்கின்றனர்.

பயனரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்கள் அணுகுவதும், பல மணி நேரங்களுக்கு கணக்கை முற்றிலுமாக முடக்குவதும் சாத்தியம் தான் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பயனர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்கக்கூடும்.  

தாக்குதல் செயல்முறை என்பது முதலில் நடக்கும் விஷயம், தாக்குபவர் ஒரு சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டைப் பதிவிறக்கி உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு சரிபார்ப்பு பொத்தானைத் தட்டினால், உங்கள் எண்ணுக்கு சரிபார்ப்புக் குறியீடு வரும்.

உண்மையில் அந்த குறியீடுகள் இல்லாமலேயே அவர்கள் கணக்கை ஹேக் செய்ய பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள், அதாவது வேண்டுமென்று பற்பல முயற்சிகளை மேற்கொள்ளும்போது, ஒரு கட்டத்தில் அரை நாளுக்கு குறியீடுகளை நீங்கள் கோர முடியாத நிலைமை வரும் வரை உள்நுழைய முயற்சிக்கிறார்கள்.

ஹேக்கிங் செய்பவர்கள், வாட்ஸ்அப் குழுவிடம் உதவி தேவை என மின்னஞ்சல்களை அனுப்புகிறார். தனது சாதனம் திருடப்பட்டதால் இலக்கின் எண்ணை செயலிழக்கச் செய்யுமாறு கோருகிறார், பின்னர் வாட்ஸ்அப் அந்த மின்னஞ்சலை உறுதிப்படுத்த பதிலளிக்கும், அதன் பிறகு உங்கள் கணக்கு இடைநிறுத்தப்படும்.

ஆனால் உங்கள் கணக்கு செயலிழந்தது கடைசி கட்டம் வரை உங்களுக்கு தெரியாமலேயே வாட்ஸ்அப்  போகலாம். தொழில்நுட்ப குறைபாட்டை வாட்ஸ்அப் எவ்வாறு சரி செய்வது என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பக்கம் 8 / 21