Editor's Choice

திண்டுக்கல் மாவட்டத்தில் பேட்டரி வீல்சேர் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளின் வீல்சேர் பழுதடைந்திருந்தாலோ அல்லது செயல்படவில்லை என்றாலோ அதை பழுது பார்ப்பது மிகவும் கடினம் என்பதால் அதை பழுது பார்க்காமல் அப்படியே வீட்டில் வைத்திருப்பீர்கள். இவ்வகை மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக வருகிற 19.10.2020 முதல் 10.11.2020 வரை இலவசமாக பேட்டரி வீல்சேர் பழுதுபார்க்கும் முகாம் நடைபெறுகிறது. உங்களது பேட்டரி வீல்சேர் பழுதடைந்திருந்தால் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக எண்ணாகிய 0451- 2460099 என்கிற தொலைபேசி தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்

Editor's Choice

இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்திக் கற்க முடியும்.

குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் வளர்கின்றன. அதனால் அப்போதில் இருந்தே அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை காது கேளாத மாணவர்கள், வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ கற்றலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது காது கேளாத மாணவர்கள், இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் வகையில் என்சிஇஆர்டி, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும்போது, ''இந்திய சைகை மொழியில் இனி என்சிஇஆர்டி புத்தகங்களும் பிற கற்றல் உபகரணங்களும் கிடைக்கும். இதன்மூலம் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் காது கேளாதோர் சமூகத்தினர் மிகுந்த பயன் பெறுவர்'' என்றார்.

Editor's Choice

திண்டுக்கல் மாவட்டத்தில் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட, பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட பாதிப்பிற்குள்ளானவர்களில் இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகள் முழுவதும் செயல் இழந்தவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராக இருக்க வேண்டும். கல்வி பயிலுபவர்கள், பணிக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்படும். ஏற்கனவே இச்சக்கர நாற்காலி பெற்றவர்கள் மீண்டும் பெற இயலாது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 30&10&2020 க்குள் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0451 2460 099 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு. விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Editor's Choice

சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 6 நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை பராமரிப்பு செய்வதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஆறு நாட்கள் சிறப்பு விடுப்பு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

 

Editor's Choice

இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் என்சிஇஆர்டி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாத குழந்தைகள், சைகை மொழியில் பாடப்புத்தகங்களையும் பிற கல்வி உபகரணங்களையும் உபயோகப்படுத்திக் கற்க முடியும்.

குழந்தைப் பருவத்தில்தான் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் வளர்கின்றன. அதனால் அப்போதில் இருந்தே அவர்களின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப, கல்வி உபகரணங்களை வழங்க வேண்டியது அவசியம். இதுநாள் வரை காது கேளாத மாணவர்கள், வாய்மொழியாகவோ எழுத்து மூலமாகவோ கற்றலில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தற்போது காது கேளாத மாணவர்கள், இந்திய சைகை மொழியில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்கும் வகையில் என்சிஇஆர்டி, இந்திய சைகை மொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மெய்நிகர் முறையில் மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் கூறும்போது, ''இந்திய சைகை மொழியில் இனி என்சிஇஆர்டி புத்தகங்களும் பிற கற்றல் உபகரணங்களும் கிடைக்கும். இதன்மூலம் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் காது கேளாதோர் சமூகத்தினர் மிகுந்த பயன் பெறுவர்'' என்றார்.

Editor's Choice

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நலனுக்காக 1999ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் இயற்றப்பட்டது இச்சட்டம்

மனவளர்ச்சி மற்றும் அவர்கள் தொடர்புடைய ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் பல்வகை ஊனமுற்றோர் ஆகிய 4 பிரிவினரின் நலன்களுக்காக தேசிய அறக்கட்டளை 1999 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 18 வயதுக்கும் மேலுள்ள இத்தகைய குழந்தைகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர்களை நியமிப்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 100 கோடி கார்ப்பஸ் நிதியில் (ஒரு முறை டெப்பாசிட் நிதி) தேசிய அறக்கட்டளை உருவாக்கி கடந்த இறுபது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சட்டத்தை செயல்படுவதில் பல்வேறு போதாமைகள் உள்ளபோதிலும், நிரமயா என்ற பெயரில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு சுகாதார காப்பீடு உள்ளிட்ட சில திட்டங்களையும் இந்த அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
 
இந்திய அரசும் கையெழுத்திட்டு ஏற்றுள்ள 2007ஆம் ஆண்டு ஐ.நா. ஊனமுற்றோர் கன்வென்ஷன் விதிகளுடன் தேசிய அறக்கட்டளை சட்ட விதிகளும் உடன்பாடுள்ளவைகளாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2016ல் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுவிட்டபோதிலும், தேசிய அறக்கட்டளை சட்டத்தை திருத்த  மத்திய அரசு தாமதப்படுத்தாமல் உடனடியாக செய்து தர முன்வர வேண்டும்.

பக்கம் 14 / 21